இறை இல்லமான கஃபதுல்லாஹ்

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

நபி இல்லமான மதீனா முனவ்வரா

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

முன்னாள் கிப்லாவான பைத்துல் முகத்தஸ்

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

இந்தியாவின் இதயமான பாபரி மஸ்ஜித்

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

முஸ்லிம்களின் உயிரான திருக்கலிமா

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Wednesday, February 26, 2014

BJPயின் பாசிச அணுகு முறை


BJP எங்கும் பொய் எதிலும் பொய்


rss மற்றும் bjp நாச வேலைகள்


rss பற்றி


சர்சைக்குரிய நாயகன் மோடி


பர்மாவில் என்ன நடக்கிறது ?



இஸ்லாமிய மார்க்கத்திற்கு வந்தார் டோனி பிளேய‌ரின் மனைவி செர்ரி பிளேர்

பிரிட்டிஷ் முன்னாள் பிரதமராக இருந்த டோனி பிளேய‌ரின் மனைவி செர்ரி பிளேர். இவரது ஒன்று விட்ட சகோதரிதான் லாரன் பூத். 43 வயதாகும் இவர் இஸ்லாமிய மார்க்கத்திற்கு தான்மாறியுள்ளதாக அறிவித்துள்ளார்.

1967 ஆம் ஆண்டு லண்டனில் பிறந்த லாரன் பூத் (Lauren Booth) பிறப்பில் கிறிஸ்துவ மதத்தின் கத்தோலிக்க‌ பிரிவைச் சேர்ந்தவர். இவர் கடந்த வாரம் லண்டனில் நடைபெற்ற உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்கான பேரணியில் தன்னை இஸ்லாத்தில் இணைத்துக் கொண்டதாக செய்தியாளர்களிடம் பிரகடனப்படுத்தினார்.

(கீழுள்ள வீடியோவைப் பார்க்கவும்)

https://www.youtube.com/watch?v=RY6PThbfWdY

லாரன் பூத் ஈரானில் உள்ள பிரஸ் தொலைக்காட்சியில் வேலை செய்து வருகிறார். அண்மையில் ஈரானில் கோம் நகரத்திலுள்ள பாத்திமா மாசூம் என்ற இடத்தில் இருக்கும்போது ஏற்பட்ட ஆன்மீக மன மாற்றமே தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டத‌ற்கு காரணம் என லண்டனிலிருந்து வெளிவரும் டெய்லி மெயில் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளார். 

Tuesday, February 25, 2014

'ஜெய் ஹிந்த்' என்ற வீர முழக்கத்துக்கு சொந்தக்காரர் ஜெய்னுலாப்தீன் என்ற இஸ்லாமியர் தான்

'ஜெய் ஹிந்த்'க்கு சொந்தக்காரர் ஜெயினுலாப்தீன் !

இந்தியாவின் தேசபக்தர்கள் அடிக்கடி முழங்கும் 'ஜெய் ஹிந்த்' என்ற முழக்கம் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களுடன் தொடர்பு படுத்திப் பேசப்பட்டு வருகிறது.

'ஜெய் ஹிந்த்' என்ற அந்த வீர முழக்கத்துக்கு சொந்தக்காரர் ஜெய்னுலாப்தீன் என்ற இஸ்லாமியர் தான் என தற்போது தெரியவந்துள்ளது.

'நரேந்திர லூதர்' என்ற வரலாற்று ஆசிரியர் 'Lengendotes of Hyderabad' என்ற புத்தகத்தில் 'ஜெய் ஹிந்த்' என்ற வீர முழக்கம் இந்திய ராணுவத்தின் முழக்கமாக மாறியது எப்படி என்பது, குறித்து எழுதியுள்ளார்.

இரண்டாம் உலகப்போரின் போது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஜெர்மன் நாட்டில் இருந்துக் கொண்டு, இந்திய சுதந்திர போருக்கான படைகளை திரட்டி பயிற்சியளித்தார்.

அமெரிக்க முகமூடியை கிழிக்கும் நபீலா !!!!

அமெரிக்க முகமூடியை கிழிக்கும் நபீலா !!!!

இந்த பெண் யார் என்று தெரிகிறதா? மலாலா மலாலா என்று தினமும் செய்திகளை வெளியிடும் எந்த ஒரு அமெரிக்க சார்பு ஊடகங்களாவது இவரை பற்றி செய்திகளை வெளியிட்டிருக்குமா? இவரது பெயர் நபிலா பாகிஸ்தானின் வர்ஜிச்தான் மாகாணத்தை சேர்ந்தவர்.அமெரிக்காவின் கோரமான தாக்குதலுக்கு எதிராக விவரித்தவர்.

மலாலாவை போலத்தான் ஆனால் என்ன மலாலாவை தூக்கி பிடிக்கும் எந்த ஒரு மீடியாவும் இவரை பற்றிய எந்த ஒரு செய்தியையும் வெளியிடுவதே கிடையாது. காரணம் மலாலாவின் குற்றசாட்டுக்கள் அனைத்தும் அமெரிக்க எதிரியான தாலிபான்களை பற்றியது. அதில் கூட பல சர்சைகள் உள்ளன இருந்தும் அதை பற்றி எந்த ஒரு ஊடகமும் கண்டுகொள்வதில்லை ஆனால் இவரின் குற்றசாட்டுக்கள் அமெரிக்காவின் கோரமான தாக்குதலால் கொல்லப்பட்ட அமெரிக்காவுக்கு எதிரான செய்திகள்.

இந்து மதம் கூறும் இஸ்லாம்


இந்து மதம் கூறும் இஸ்லாம்

என் இனிய நண்பர்களுக்கு..
மனித இனத்தைப் பற்றி இஸ்லாம் கூறுகையில்...
''மனிதர்களே.. நிச்சயமாக நாமே உங்களை ஒரு ஆண் ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். நீங்கள் உங்களுக்குள் (ஒருவரையருவர்) அறிமுகப்படுத்திக் கொள்வதற்காகவே உங்களைப் பல்வேறு பிரிவினராகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். நிச்சயமாக உங்களில் மிக்க கண்ணியம் வாய்ந்தவர் (கடவுளுக்கு) அதிகம் அஞ்சி வாழ்பவர்தான்.'' (அல்குர்ஆன்).

இஸ்லாம் என்பது இன்று நேற்றுப் பிறந்த மார்க்கமல்ல.. மாறாக உலகம்தோன்றிய போதே அதுவும் தோன்றிவிட்டது. காலப்போக்கில் அதில் மாசு படிந்தபோது அவ்வப்போது தீர்க்க தரிசிகள் இறைத்தூதர்கள் தோன்றி அதனைப் பிரகாசிக்கச் செய்து வந்தார்கள். அவ்வாறு வந்தவர்களில் இறுதியானவர்தான் முஹம்மது நபி(ஸல்) அவர்களாவார்கள். சிலர் அரேபியாவிலே இஸ்லாம் தோன்றியதால் அது அரபுகளுக்குரியது என்பர். அவ்வாறல்ல - அகிலத்தார் அனைவருக்கும் பொதுவான மார்க்கம்தான் இஸ்லாம்.

Monday, February 24, 2014

முஸ்லிம்கள் மீது எப்படிப்பட்ட காழ்புணர்வை ஊடகங்கள் கொண்டுள்ளன என்பதற்கு எடுத்துக்காட்டு இன்றைய மாலைமலர் நாளிதழில் வந்த பரபரப்பு செய்தி.

முஸ்லிம்கள் மீது எப்படிப்பட்ட காழ்புணர்வை நமது தமிழக ஊடகங்கள் கொண்டுள்ளன என்பதற்கு மற்றுமொறு எடுத்துக்காட்டு இன்றைய மாலைமலர் நாளிதழில் வந்த பரபரப்பு செய்தி.

த்வானி அவர்கள் சில மாதங்களுக்கு முன்பு மதுரை வந்த போது அவர் செல்லவிருந்த பாதையில் பைப் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதாக ஊடகங்கள் கொக்கரித்தன.

இன்றைய நாளிதழில் பறவை பாதுஷா என்பவர் கேரளாவில் கைது செய்யப்பட்டதாகவும் அவர் மதுரை கொண்டு வரப்படுகிறார் என்றும் செய்தி வெளியாகியிருந்தது.

இதில் நம்மை சிரிப்புக்கு உள்ளாக்கிய சம்பவம் என்னவென்றால்; மாலைமலர் செய்தித்தாள் இந்த செய்தியை பரபரப்பாக முதல் பக்கத்தில் வெளியிட்டிருந்ததும், அதில் பெங்களூர் பிஜேபி அலுவலக குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு ஒரு ஆண்டுக்கு மேலாக சிறையில் இருக்கும் சகோ. கிச்சான் புகாரி அவர்களின் படத்தை போட்டு பறவை பாதுஷா என குறிப்பிட்டு இருந்ததும்தான் இவர்களின் பத்திரிக்கை எவ்வளவு பொறுப்போடு செயல்பட்டு வருகிறது என்பதற்கு சிறந்த சாட்சி. 

தாயை அடித்த மகனுக்கு 2400 சவுக்கடி கொடுத்து பல்லை உடைக்க உத்தரவு கருத்துகள்



மெக்கா: சவுதியில் தாயை தாக்கிய மகனுக்கு 2400 சவுக்கடி மற்றும் மகனின் பல்லை உடைக்கவும் சவுதி கோர்ட் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.சவுதியில் உள்ள மெக்கா நகரைச் சேர்ந்த 30 வயது வாலிபர் ஒருவரும், அவரது 60 வயது தாயாரும் சம்பவத்தன்று காரில் சென்று கொண்டிருந்தனர். இதில் குடும்ப தகராறு காரணமாக இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த மகன், தனது தாயின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதில் தாயின் பல் உடைந்து படுகாயமடைந்தார்.

மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியது அமெரிக்கா: தலிபான்கள் தகவல்

இஸ்லாமாபாத், பிப்.21- தலிபான்கள் வசம் இருக்கும் அமெரிக்க ராணுவ அதிகாரியை விடுவிக்க தங்களுடன் அமெரிக்கா மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியது என்று தலிபான் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவ வீரர் பெர்க்டாலை விடுவிக்கும் வரை தலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப் போவ தில்லை என்று அமெரிக்கா நேற்றைய முன்தினம் அறிவித்தது.
இந்நிலையில் இது குறித்து தலிபான்களின் மூத்த தலைவர் ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் நேற்று கூறுகையில், பெர்க் டாலை விடுவிப்பதற்கு பதிலாக அந்நாட்டு குவாண் டனா மோ சிறையில் இருக் கும் 5 மூத்த தலிபான் நிர்வாகி களை விடுவிப்பது குறித்து எங்களிடம், அமெ ரிக்க அரசு மறைமுக பேச்சு வார்த்தை நடத்தியது என்று தெரிவித் தார்.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், தலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டிருப் பதாக கூறப்படுவது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது. குவாண்டனாமோ சிறை யில் உள்ள தலிபான் களை விடுவிப்பது தொடர்பாக அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது  என்றார்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ் தான் எல்லையில் 2009-ஆம் ஆண்டு தலிபான்களால் பெர்க்டால் கடத்தப்பட்டார்.
5 ஆண்டுகளுக்குப் பிறகு பெர்க்டால் உயிருடன் உள்ள காணொளிப் பதிவை கடந்த டிசம்பர் மாதம் தலிபான்கள் வெளியிட்டனர்.


Read more: http://www.viduthalai.in/component/content/article/101-world-politics/75693-2014-02-21-12-17-49.html#ixzz2uHVTWfCJ

தொன்மையான பள்ளிவாசலை மீட்டெடுத்த ரஷிய முஸ்லிம்கள்










தொன்மையான பள்ளிவாசலை மீட்டெடுத்த ரஷிய முஸ்லிம்கள்

ரஷியாவில் ‘காசிமோவ்’’ கிராமத்தில் ‘மஸ்ஜிது கான்’’ எனும் பள்ளிவாசலைப் பெரும் போராட்டத்திற்குப்பின் ரஷிய முஸ்லிம்கள் மீட்டனர். 15ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்தப் பள்ளிவாசலை 1702ஆம் ஆண்டு ரஷிய மன்னர் பீட்டர் தி கிரேட் இடித்துத் தள்ளினார். பாங்குமேடை மட்டுமே எஞ்சியிருந்தது.

பின்னர் 1768ஆம் ஆண்டு அப்பள்ளிவாசல் மீண்டும் கட்டப்பட்டது. 1835ஆம் ஆண்டு தாத்தாரிய தலைவர்கள் பள்ளிவாசலை விரிவுபடுத்தி, தற்போதைய வடிவில் சீரமைத்தனர். பாரம்பரியமிக்க இந்தப் பள்ளிவாசல் கடந்த 30 ஆண்டுகளாக அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, தொழுகைக்குத் தடையும் விதிக்கப்பட்டிருந்தது. நீண்டகால சட்டப் போராட்டத்திற்குப்பின் நீதிமன்றத் தீர்ப்பின்படி ரஷிய முஸ்லிம்கள் ‘மஸ்ஜிது கான்’’ பள்ளிவாசலை மீட்டெடுத்தனர்.

இதற்கிடையில் ரஷியாவின் கிறித்தவப் பெண்மணி ஒருவர் இஸ்லாத்தை ஏற்றார். ஒலிஜா சைரஜீ சோர்கீனா என்ற அப்பெண்மணி பாலஸ்தீன மக்களை ‘ஃகஸ்ஸா’வில் சந்தித்து தமது விருப்பத்தை வெளிப்படுத்தினார். ஃகஸ்ஸாவில் உள்ள ஷரீஆ உயர்நீதிமன்றத்தின் முன் ஆஜரான அவர், தமது சுயவிருப்பத்தின்பேரில் கலிமா சொல்லி இஸ்லாத்தில் இணைந்தார்.

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் உலக மீடியக்களுக்கு மரண அடி கொடுக்கும் சவுதி அரசின் தீவிர வாத தடுப்பு சட்டம்

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும்
உலக மீடியக்களுக்கு மரண அடி கொடுக்கும்
சவுதி அரசின் தீவிர வாத தடுப்பு சட்டம்
********************************************

சில தினங்களுக்கு முன்பு சவுதி மன்னர் அப்துல்லா புதிய தீவிர வாத தடுப்பு சட்டம் என்ற பெயரில் ஒரு உத்தரவை வெளியிட்டிருந்தார்

அந்த சவுதி அரசின் அதிகாரபுர்வ உத்தரவு அரபு நாளிதழ்களில் தெளிவாக வெளியிட பட்டிருந்தாலும் ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளில் முழுமையாக இருட்ட்டிப்பு செய்ய பட்டு விட்டதாகவே நாம் கருதுகிறோம்

தீவிர வாத த்தோடு இஸ்லாத்தை தொடர்ப்பு படுத்த குடியவர்களுக்கு மரண அடி தரும் விதத்தில் அந்த உத்தரவு அமைந்திருந்த தால் தான் மீடியாக்கள் அனைத்தும் அதை இருட்டடிப்பு செய்துவிட்டன

சவுதியை சார்ந்தவர்கள் சவுதிக்கு உள்ளேயோ வெளியேயோ தீவிர வாத செயல்களிலோ தீவிரவாத த்தை வளர்ப்பதர்காக பிரச்சாரத்திலோ இறங்கினால் அவர்கள் செய்யும் செயலின் தன்மைக்கு ஏர்ப்ப மூன்று ஆண்டு முதல் இருபது ஆண்டு வரை சிறை சிறை தண்டனை வழங்குவதர்கு அந்த சட்டம் வழி செய்கிறது

டார்வினும் பண்டைய மூடக்கொள்கையின் மீள் பிரவேசமும்.

Thales - பரிணாமவியலின் ஆரம்பகர்த்தாக்களில் ஒருவர்.

18 ஆம் 19 ஆம் நூற்றாண்டுகளில் ஐரோப்பாவில் மீள் எழுச்சி பெற்ற பரிணாமக் கொள்கை பண்டைய பேகன்களின் நம்பிக்கைகளில் ஏற்கனவே வழக்கத்தில் இருந்த மூடக்கொள்கைகளில் ஒன்றாகும்.டார்வின் மூலமாக பிரபலமாக துவங்கிய இந்த கோட்பாட்டின்படி உயிரினங்கள் தற்செயலாக வந்திருக்க வேண்டும், ஒன்று மற்றொன்றாக காலப்போக்கில் மாறியிருக்க வேண்டும். இந்த அளவுகோல்படியே மனிதனும் வந்தான். அதாவது, உயிரினங்கள் ஒவ்வொன்றாக மாறி பின்னர் குரங்கு போன்ற ஒன்றிலிருந்து மனிதன் வந்திருக்க வேண்டும் என்று விளக்குகின்றது இந்த கோட்பாடு.


 கடவுளின் இருப்பை பற்றி அறியாதவர்களாக, போலியான கற்பனை சிலைகளை வணங்கி வந்த பண்டைய பேகன் கலாச்சாரத்து மக்கள் உயிர்கள் உருவானது எப்படி ? என்ற கேள்விக்கு அவர்களாகவே உருவாக்கிக் கொண்ட பதில் தான் " பரிணாமக் கோட்பாடு ".இந்த பரிணாமம் சம்பந்தப்பட்ட கருத்து பண்டைய சுமேரிய கல்வெட்டுகளில் காணப்பட்டாலும் இதற்கு ஒரு வடிவம் கொடுத்தவர்கள் பண்டைய கிரேக்கர்களே.பண்டைய பேகன் தத்துவவாதிகளானThales, Anaximander , Empedocles போன்றவர்களின் கருத்துப்படி உயிர்கள் அதாவது மனிதர்கள், விலங்குகள் மற்றும் தாவரங்கள் அனைத்தும் காற்று - நீர் - நெருப்பு போன்ற உயிரற்ற சேர்க்கை மூலமே என்றனர்.இவர்களின் கருத்துப்படி உயிரினங்கள் என்பது நீரிலிருந்து திடிரென தோன்றியவையாகும்.பின்பு அவை பூமிக்கு ஏத்தது போல் தம்மை இசைவாக்கிப்படுத்திக் கொண்டது.

சிரியா மீதான ரஷ்ய மற்றும் சீனாவின் தடுப்பதிகாரம்.(Veto)

Cartoon By Latuf Carlos.
 சர்வதேச உறவுகளை இன்னும் சூடாக்குவதை உறுதியாக்கும் நடவடிக்கையில், ரஷ்யா மற்றும் சீனா ஆகியவை செவ்வாயன்று  ஐ.நா.பாதுகாப்புச் சபையில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை நசுக்குவதற்கும், சர்வதேச பொருளாதாரத் தடைகள் விதிப்பதற்கும் கொண்டுவரப்பட்ட சிரிய ஆட்சியைக் கண்டிக்கும் ஐரோப்பிய ஆதரவுடைய தீர்மானம் ஒன்றைத் தடுப்பதற்குத் தங்கள் தடுப்பதிகாரத்தைப் பயன்படுத்தின.

அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் ஆகியவை விரோதப் போக்குடன் இதைக் கண்டித்தன; குறிப்பாக ரஷ்யாவை அது சிரிய மக்களின் இழப்பில் தன் நலன்களைச் சிரியாவில் காப்பதற்கு இதைச் செய்துள்ளது என்று குற்றம் சாட்டின. மிகவும் திமிர்த்தனமான தாக்குதலானது அமெரிக்கத் தூதர் சூசன் ரைஸிடம் இருந்து வந்தது; அமெரிக்கா “ஒரு அவசர அறநெறிச் சவாலைத் தீர்க்கவும், பிராந்தியச் சமாதானம், பாதுகாப்பு ஆகியவற்றிற்கு பெருகிய அச்சுறுத்தலைத் தீர்ப்பதில் தவறவிட்டதற்காக” ஐ.நா.விடம் அமெரிக்கா சீற்றம் கொண்டுள்ளது என்று அவர் அறிவித்தார்.

கபிஸ்தலத்தில் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.

கபிஸ்தலத்தில் குடும்பத்துடன் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.

தஞ்சை வடக்கு மாவட்டம் பாபநாசம் தாலுக்கா கபிஸ்தலத்தைச் சேர்ந்த முருகன் மற்றும் அவரது இரு மகள்கள் கனிமொழி,கயல்விழி ஆகிய மூவரும் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டு தனது பெயர்களை அப்துல்லாஹ் மற்றும் சுமையா,ஆயிசா என்று தனது பெயரை மாற்றிக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்...

பலஸ்தீனிலிருந்து மக்கா வரை - வரலாற்றுப் பார்வை.

From Palestine to Makkah (Historical Glance)




Onislam.com இணையத்தளத்துக்கு மஸ்ஜிதுல் அக்சாவின் இமாம் Sheikh Yousef Juma Salama  வழங்கிய  பேட்டியின் தமிழ் வடிவம்.



 ஹஜ் என்பது இஸ்லாத்தில் மிக முக்கியமான ஒரு கடமையாகும்.பாலஸ்தீன் என்பது அல்லாஹ்வின் தூதர்களின் தொட்டிலாகும் ஏனெனில் குர்ஆனில் கூறப்பட்டுள்ள பல நபிமார்கள் பாலஸ்தீனுடன் தொடர்புபட்டவர்கலாகவே உள்ளனர்.எல்லாவற்றுக்கும் மேலாக உலகில் இதவரை நடந்த இனிமேல் நடக்காத உலக மகா உச்சி மாநாடு பலஸ்தீனிலே இடம்பெற்றது.அதுதான் எங்கள் கண்மணி நாயகம் றசூலே கரீம் முஹம்மத் (ஸல்) அவர்களின் தலைமையில் உலகில் அதுவரை அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களுக்கும் தொழுவிக்கப்பட்ட தொழுகையாகும்.இதைப் போல் ஒரு கண்ணியமான ஆன்மீகமான ஒரு உயர்ந்த மாநாடு உலகில் நடந்திருக்குமா ? நிச்சயமாக இல்லவே இல்லை.

ஆப்ரிக்காவிலிருந்து மக்காவுக்கு - வரலாற்றுப் பார்வை.

புனித மக்கா பயணம் என்பது பல நூற்றாண்டுகளாக  ஆப்ரிக்க மக்களின் மனதில் ஒரு வசீகரத்தையும் பயபக்தியையும் ஏற்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாக இருந்து வந்தது.ஆப்ரிக்க இஸ்லாமிய வரலாற்றில் புகழ்பெற்ற யாத்திரைகலான  மாலியின் சுல்தான் மன்சா மூஸாவின் மக்கவுக்கான யாத்திரை ,சொங்ஹாய்(Songhai) பிராந்தியத்தின் ஆட்சியாளர் அஸ்கியா முஹம்மதின் மக்கவுக்கான யாத்திரை மற்றும் டர்பார்(Darfur) பிராந்தியத்தின் சுல்தான் அலி தீனார் அவர்களின் மக்கவுக்கான யாத்திரை என்பன  ஆப்ரிக்க  மக்களின் புனித யாத்திரைக்கு இருந்த ஈடுபாட்டை  மிக அழகாக பிரதிபலித்தன. டர்பார்(Darfur) பிராந்தியத்தின் சுல்தான் அலி தீனார் அவர்களின் மக்கவுக்கான யாத்திரை மிகவும் பிரசித்தி பெற்றது.அதற்கு தக்க காரணமும் இருந்தது.டர்பார் சுல்தானின் பயணக் குழுவிலே மக்காவை போர்த்தும் கிஸ்வா(Kiswa) கொண்டு செல்லப்படும். டர்பார்(Darfur) பிராந்தியத்தின் கடைசி சுல்தான் அலி தீனார்அவர்கள் இந்த பயணத்துக்கு அதி முக்கியத்துவம் கொடுத்துவந்தார்.

சுல்தான் அலி தீனார் அவர்களின் யாத்திரை ஆரம்பம்.

மாலி சுல்தான் மான்ஸா மூஸா

மான்ஸா  மூஸா
மான்ஸா மூஸா என பொதுவாக அழைக்கப்படும் முதலாம் மூஸா ஆப்ரிக்க கண்டத்தின் மாலி இராஜதானியின் பத்தாவது மான்ஸா ஆவார்.மான்ஸா என்றால் மாலி மொழியில் அரசருக்கெல்லாம் அரசர் என்று பொருள்.அந்தக் காலத்தில் இருந்த மிகவும் செல்வம் படைத்த அரசர்களின் மூசாவும் ஒருவர்.

சுல்தான் மான்ஸா மூஸா  மாலி இராஜதானியை நிறுவிய அரசர் சுன்ஜாடாவின் பேரராவார்.மாலியை 1312 முதல் 1337 வரை 25 ஆண்டுகள் சீரும் சிறப்புமாக ஆண்டு வந்தார்.இவரின் இந்த 25 வருட ஆட்சி மாலியின்  பொற்காலமாக வருணிக்கப்படுகிறது.சுல்தானின் பாட்டனார் சுன்ஜாடா மாலி இனத்தை பிரதிபலிக்கும் ஒரு இராஜ்ஜியத்தை  நிறுவினார்,ஆனால்  மூஸா அவர்களோ இஸ்லாத்தை பிரதிபலிக்கும் ஒரு ராஜ்ஜியத்தை  நிறுவ பாடுபட்டார்.சுல்தான் மான்ஸா மூஸா தனது ஹஜ்ஜை 1324 இல் நிறைவேற்றினார்.சுல்தான் மான்ஸா மூஸா அவரது ஹஜ் பிரயாணம் சம்பந்தமாக மிகவும் பிரசித்தி பெற்றவர்.நம் சகோதரர்கள் பலர் அறிதிராத அந்த வரலாற்று உண்மை பற்றி இப்போது பார்ப்போம்.

சுல்தான் மான்ஸா மூஸா அவரது ஹஜ் பிரயாணம் சம்பந்தமாக மிகவும் அறியப்பட்டவர்.மான்ஸா மூஸா ஒரு நல்ல முஸ்லிமாக இருந்தார்.அவரின் ஹஜ் பிரயாணம் அவரை வடக்கு ஆப்ரிக்காவிலிருந்து மத்திய கிழக்கு வரை அறிமுகப்படுத்தியது.அவர் அல்லாஹ்வையும் நபிமார்களையும் குரானின் வசனகளையும் ஆழமாக நம்பினார்.அவரை பொறுத்தவரை மத்திய தரைக் கடலின் கிழக்கு  பிராந்தியத்தில் கலாச்சாரத்துக்கு  ஒரு அடிக்கல்லை நாட்டியது இஸ்லாமே.சுல்தான் மான்ஸா மூஸா தனது இராஜ்ஜியத்தில் இஸ்லாத்தை பரவுவதற்கும் வளரப்பதட்கும் அதிக காலத்தை செலவிட்டார்.

பன்றிக் கொழுப்பு.. உஷார்..



    ஷேக் சாஹிப் என்னும் சகோதரர் பிரான்ஸ் நாட்டிலுள்ள பிகால் (Pegal) என்ற நகரத்தில் உணவுப் பொருட்கள் தரக்கட்டுப்பாட்டு மையத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவர் பணியாற்றும் துறை தரத்தை நிர்ணயம் செய்யும் துறை (Quality Control) என்பதால் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை ஆய்வு செய்து அதன் தரத்தை பதிவு செய்வதே அவருக்குக் கொடுக்கப்பட்ட வேலை.

எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் அவர்களின் தயாரிப்பை விற்பனைச் சந்தையில் அறிமுகப்படுத்தும் போது உணவுப் பொருளாக இருந்தாலும், மருந்துப் பொருளாக இருந்தாலும் அதை சோதனைக்குட்படுத்திய பின்பே அறிமுகப்படுத்தும். அவ்வாறு மேற்கொள்ளப்படும் சோதனையில் விற்பனைக்கு வரவிருக்கும் உணவு மற்றும் மருந்துகளின் கலவையை (ingredients) சோதனை செய்து அதை

இஸ்லாம் - வாளால் வளர்ந்த மதம் ???




இஸ்லாம் - மார்க்கத்தில் நிர்பந்தமே இல்லை. (2:256) விரும்பினோர் ஏற்கட்டும். விரும்பாதோர் நிராகரிக்கட்டும் (18:29) என்று இறைவன் கூறுகின்றான்.

இஸ்லாத்தை மாற்றார்களிடம் எடுத்துச் சொல்வதில் கூட முஸ்லிம்கள் பலம் பிரயோகிக்கக் கூடாதென எச்சரிக்கப்பட்டுள்ளார்கள். அத்துடன் எவ்வளவு அiதியான வழிகளைப் பயன்படுத்திட முடியுமோ அவ்வளவு அiதியான வழிகளை மேற்கெர்ளள வேண்டும் என்றும் குர்ஆன் கூறுகிறது.

நீர் நளினமாகவும், அழகான நல்லுபதேசத்தைக் கொண்டுமே உம் இறைவனின் வழியின்பால் அழைப்பீராக! அன்றி, அவர்களுடன் (தர்க்கிக்க நேரிட்டல்) நீர் (கண்ணியமான) அழகான முறையில் தர்க்கம் செய்வீராக! அவனுடைய வழியிலிருந்து தவறியவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக உம் இறைவன் நன்கறிவான். நேரான வழியிலிப்போர் யார் என்பதையும் அவன் தான் நன்கறிவான். (16:125)

முஸ்தபா அக்காத் - ஹாலிவூட்டை அசத்திய முஸ்லிம்.





முஸ்தபா அக்காத்



"இன்றைய காலகட்டத்தில் தீவிரவாதம் என்றால் பயங்கரவாதம் என்றால் இஸ்லாம்,முஸ்லிம்கள் என்று ஒரு மாயை உலகெங்கும் திரைப்படங்கள் மூலமும் செய்தி ஊடகங்கள் மூலமும் உருவாக்கப்பட்டுள்ளது.ஆனால் மதத்தீவிரவாதிகள் மதத்தீவிரவாதம் என்று ஒன்றை நாம் கருத வேண்டும் என்றால் அது இஸ்லாமிய சாம்ராஜ்ஜியம் மீது மேட்கோள்ளப்பட்ட சிலுவைப் போரைத்தான் குறிப்பிடவேண்டும்.நான் கிறிஸ்தவத்தை குறை கூறவில்லை ஏனெனில் அந்தப் போர் சில சுயநலவாதிகளால் கிறிஸ்தவத்தின் பெயரால் மேட்கொள்ளப்பட்டதொன்றாகும்."இவ்வாறு சொன்னவர்தான் முஸ்தபா அக்காத்.

உமர் மிடா - திருக்குர்ஆன் ஜப்பானிய மொழிபெயர்ப்பாளர்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

Haji Umar Mita

ஜப்பானிய இஸ்லாமிய வரலாற்றுப் பதிவேடுகளில் காணப்படும் மிகச்சிறந்த பெயர்தான்  உமர் மிடா.ஜப்பானிய முஸ்லிம்களின் பெருமை என அழைக்க எல்லாவிதத்திலும் தகுதியுடையவரே இவர்.

இஸ்லாம் ஆரம்ப நூற்றாண்டுகளிலே சீனாவில் பல இடங்களில் பரவிவிட்டது.அதன் பின்பு இந்தியாவிலும் இந்தோனேசியாவிலும் இஸ்லாம் அறிமுகமானது.ஆனால் இஸ்லாத்தின் வடக்கு நோக்கிய பயணம் 15 நூற்றாண்டில் பிலிப்பைன்சை ஆக்கிரமித்திருந்த ஸ்பானிய குடியேற்றத்தால் தடுக்கப்பட்டது.பிலிப்பைன்சுக்கு அடுத்ததாக ஜப்பான் ஒரு பௌத்த நாடாக
இருந்தது.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் ஒரு சில முஸ்லிம்கள் ஜப்பானில் வாழ்ந்தாலும் முஸ்லிம்களின் குறிப்பிட்டுக் கூறக்கூடிய குடியேற்றம் பத்தொம்பதாம் நூற்றாண்டின் இறுதியில் பகுதியிலேயே இடம்பெற்றது.பிரித்தானிய மற்றும் டச்சு போர்க்கப்பல்களில் பணி புரிந்த மலே இன மக்களே ஜப்பானின் முதல் முஸ்லிம் குடியேற்றவாசிகள்.மலே இனத்தவர்களின் முதல் குடியேற்றம் இடம்பெற முன் 1890 இல் உஸ்மானிய கிலாபத்தின் போர்க் கப்பல் ஒன்று ஜப்பானுடன் இராஜதந்திர உறவுகளை ஏற்படுத்தும் நோக்கில் வந்தது."எர்துக்ருள்" என்று அழைக்கப்படும் இக்கப்பல் தனது பயணத்தின் நோக்கத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்து கொண்டு தனது தாய் நாட்டுக்கு 609 பேருடன் திரும்பிக் கொண்டிருந்த வேளையில் 1890 செப்டெம்பர் மாதம் 540 பேருடன் கடலில் மூழ்கியது.

இங்கிலாத்தின் முதல் முஸ்லிம்


வில்லியம் அப்துல்லாஹ் க்யுலியம்




பிரித்தானியாவின் முதல் முஸ்லிம் என்பதைவிட பிரித்தானிய பிரஜைகளில் முதன் முதலில் புனித இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டவர் என்ற தலைப்பே இந்த பதிவுக்குப் பொருந்தும் என்றாலும் பதிவின் தலைப்பின் நீளம் கருதியே மேலுள்ள தலைப்பை இட்டேன்.



லிவெர்பூல் இங்கிலாந்தின் துறைமுக நகரங்களில் மிகவும் பிரசித்திபெற்ற ஒரு நகரமாகும்.துறைமுக நகரம் என்பதால் அங்கு பல்வேறுபட்ட சமயத்தவர்களும் வந்து போவார்கள்.அப்படி வந்து போகும் முஸ்லிம்களுக்கும் அங்கு வாழும் முஸ்லிம்களுக்கும் அவர்களின் தொழுகைக் கடமைகளை நிறைவேற்ற கம்பீரமாக காட்சி தருகிறது லிவெர்பூல் அர்-ரஹ்மா ஜும்மா பள்ளிவாசல்.இந்த நகருக்கும் பிரித்தானியாவின் இஸ்லாமிய வரலாற்றுக்கும் இடையே மிக மிக நெருங்கிய தொடர்பொன்று உள்ளது.ஏனெனில் லிவெர்பூல் நகரிலே பிரித்தானியாவின் பதிவு செய்யப்பட முதல் பள்ளிவாசல் துவங்கப்பட்டது.அது லிவெர்பூல் அர்-ரஹ்மா ஜும்மா பள்ளிவாசல் அல்ல.மாறாக இன்று யாருடையதும் கவனிப்பாரற்று காணப்படும் ஒரு பள்ளிவாசல்.அதை துவங்கியவரே பிரித்தானியாவில் முதன் முதலாக இஸ்லாத்தை தமது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட வில்லியம் அப்துல்லாஹ் கியுலியம்

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள்.

நான் தான் இமாம் மஹ்தி - என கூறியவர்கள்.



இமாம் மஹ்தி பற்றி ஒரு சிறு அறிமுகம்.

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் மறுமையின் அடையாளங்களில் ஒன்றாக இருக்கின்றார்கள். அவர்கள் நபி ஈஸா அலை அவர்கள் இவ்வுலகில் இறங்கு முன்பு இவ்வுலகிற்கு வருகை தருவார்கள் என ஹதீஸ்கள் சான்று பகர்கின்றன.

இமாம் மஹ்தி (அலை) அவர்கள் இறுதித் தூதர் நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் வழித்தோன்றல் என்பதையும், இமாம் மஹ்தி (அலை) அவர்களின் இறுதி நாளின் சமீபமாக அவரின் வருகையினால் மனித சமூகம் தனது யதார்த்தமான வாழ்வை அடைந்து கொள்ளும் என்பதையும் ஹதீஸ்கள் அறிவிக்கின்றன.

என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர், அரபிகளை ஆட்சி செய்யும் வரை இவ்வுலகம் முடியாது. அவரது பெயர் என் பெயரை ஒத்ததாகும்.
(இப்னு மஸ்ஊத் (ரலி) திர்மிதி, அபூதாவூத்)

என் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் ஆட்சியமைப்பார். அவர் பெயர் என் பெயரை ஒத்திருக்கும். (இப்னு மஸ்ஊத் (ரலி) திர்மிதி)

இவ்வுலகில், ஒருநாள் மட்டுமே எஞ்சியிருந்தால் என் குடும்பத்தைச் சேர்ந்த அவர் ஆள்வதற்காக அந்த நாளை அல்லாஹ் நீட்டுவான்.
(அபூ குறைறா (ரலி) திர்மிதி - இப்னுமாஜா)

வாஸ்கொடகாமாவின் ஹஜ் பிரயாணிகள் மீதான தாக்குதல்.

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால் ஆரம்பம் செய்கிறேன்.

வாஸ்கொடகாமாவின் 
  ஹஜ் பிரயாணிகள் மீதான தாக்குதல்

வஸ்கொடகாமா

 வாஸ்கோ ட காமா (பிறப்பு: 1460 அல்லது 1469 – இறப்பு: 24 திசம்பர் 1524) ஒரு போர்ச்சுகீசிய நாடுகாண்பயணி ஆவார். மேலும் இவர்தான் முதன்முதலாக ஐரோப்பாவிலிருந்து இந்தியாவிற்குக் கடல் வழியைக் கண்டுபிடித்தார். குறைந்த காலத்திலேயே இவர் வைசிராய் என்ற பெயரில் 1524ஆம் ஆண்டு போர்ச்சுகீசிய இந்தியாவின் ஆளுனர் ஆனார்.

வஸ்கொடகாமா 1498 மே 20 ஆம் திகதி இந்தியாவின் கோழிக்கோடு அருகே கரையோதிங்கினார்.அப்போது கோழிக்கோடு சாமூத்திரிகளால் ஆளப்பட்டு வந்தது.வஸ்கொடகாமாவுக்கு கோழிக்கோடில் சம்பிரதாயபூர்வமாக வழங்கப்படும் எல்லாவிதமான வரவேற்புக்களும் வழங்கப்பட்டன.என்றாலும் அவருக்கும் சாமூத்ரிகளுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை அவ்வளவு உறுதியாக இருக்கவில்லை.1498 ஆகஸ்ட் 29 ஆம் திகதி கோழிக்கோடை விட்டு சொந்த நாடு போகும் நோக்கில் அங்கிருந்து வெளியேறினார்.

ஸ்பெயினின் தளபதி தாரிக் இப்னு ஸியாத்.




மத்தியத் தரைக்கடல் வழியாக அட்லாண்டிக் மகா சமுத்திரத்திற்குள் நுழையும் ஒவ்வொரு கப்பலும் ஜிப்ரால்டர் ஜலசந்தியைக் கடந்தே சென்றாக வேண்டும் அல்லது அங்கு சிறிது தாமதித்து இளைப்பாறிச் செல்ல வேண்டும் என்பது கட்டாயமாகும். இந்த ஜிப்ரால்டர் ஜலசந்தியானது ஐரோப்பாவின் தென்மேற்கு முனையில் மற்றும் மொராக்கோவுக்கு எதிர்புறமாக அமைந்துள்ளது.

சரி..! ஜிப்ரால்டர் என்று ஏன் அழைக்கப்படுகின்றது என்று தெரியுமா உங்களுக்கு? ஜிப்ரால்டர் என்பது ஜபல் அல் தாரிக் அல்லது ''தாரிக்(இப்னு ஸியாத்)மலைக்குன்று'' என்பதனை மொழிமாற்றி, சுருங்கச் சொல்லப் பொன்னால் அரபி மொழியை மோசடி செய்து, அதனை ஜிப்ரால்டர் என்று மேற்குலகு அழைத்துக் கொண்டிருக்கின்றது. இது நாம் காணப் போகும் வரலாற்று நாயகரான தாரிக் இப்னு ஸியாத் அவர்களின் பெயரைத் தாங்கித் தான் நிற்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய வரலாற்றுச் சிறப்புக்குச் சொந்தக்காரரைப் பற்றி நாம் இங்கு சிறிது காண்போமா..!

சினாவில் இஸ்லாத்தை விதைத்த - ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி)

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பம் செய்கிறேன்


படித்ததில் பிடித்த ஒன்று உங்களுக்காக  



பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உயிருக்கு உயிரான தோழர்கள் ஏராளமானோர் இருந்தாலும் ஒருசிலரின் தனித்துவமிக்க தியாகமும் அர்ப்பணிப்பும் துணிச்சலான செயலாக்கங்களும் வரலாற்று ஏடுகள் அவர்களின் பெயர்களை உயர்த்திப் பிடிக்கின்றன.

குறிப்பாக உலகம் முழுவதும் இஸ்லாமிய மார்க்கத்தை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற வேட்கையில் ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு சாதனை செய்துள்ளனர். நீண்ட நெடிய அந்தப் பட்டியலில் நாம் வாழும் இந்திய மண்ணிற்கும் கிழக்காசிய நாடுகளுக்கும் இஸ்லாம் வேரூன்ற காரணமாக இருந்த ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்களின் சாதனைகளைக் காண்போம்.

பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கி.பி. 610இல் மக்காவில் வைத்து அல்லாஹ்வுடைய தீனுல் இஸ்லாத்தை மக்களிடையே  விதைத்திடும் அழைப்புப் பணியில் ஈடுபட்ட தொடக்க நிலையில், சத்தியத்தின் பால் ஈர்க்கப்பட்டு பெருமானாரிடம் ஒப்பந்தம் செய்த, துவக்க நிலை முஸ்லிம்களில் 17வது நபர்தான் ஹஸ்ரத் ஸஅத் இப்னு அபீவக்காஸ் (ரலி) அவர்கள் அப்போது அவர்களின் வயது 17.