Monday, February 24, 2014

மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியது அமெரிக்கா: தலிபான்கள் தகவல்

இஸ்லாமாபாத், பிப்.21- தலிபான்கள் வசம் இருக்கும் அமெரிக்க ராணுவ அதிகாரியை விடுவிக்க தங்களுடன் அமெரிக்கா மறைமுக பேச்சுவார்த்தை நடத்தியது என்று தலிபான் அமைப்பின் மூத்த தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ராணுவ வீரர் பெர்க்டாலை விடுவிக்கும் வரை தலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப் போவ தில்லை என்று அமெரிக்கா நேற்றைய முன்தினம் அறிவித்தது.
இந்நிலையில் இது குறித்து தலிபான்களின் மூத்த தலைவர் ஒருவர் தனியார் செய்தி நிறுவனத்திடம் நேற்று கூறுகையில், பெர்க் டாலை விடுவிப்பதற்கு பதிலாக அந்நாட்டு குவாண் டனா மோ சிறையில் இருக் கும் 5 மூத்த தலிபான் நிர்வாகி களை விடுவிப்பது குறித்து எங்களிடம், அமெ ரிக்க அரசு மறைமுக பேச்சு வார்த்தை நடத்தியது என்று தெரிவித் தார்.
இதுகுறித்து அமெரிக்க அதிகாரி ஒருவர் கூறுகையில், தலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டிருப் பதாக கூறப்படுவது குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க முடியாது. குவாண்டனாமோ சிறை யில் உள்ள தலிபான் களை விடுவிப்பது தொடர்பாக அமெரிக்க அரசு பரிசீலித்து வருகிறது  என்றார்.
ஆப்கானிஸ்தான்-பாகிஸ் தான் எல்லையில் 2009-ஆம் ஆண்டு தலிபான்களால் பெர்க்டால் கடத்தப்பட்டார்.
5 ஆண்டுகளுக்குப் பிறகு பெர்க்டால் உயிருடன் உள்ள காணொளிப் பதிவை கடந்த டிசம்பர் மாதம் தலிபான்கள் வெளியிட்டனர்.


Read more: http://www.viduthalai.in/component/content/article/101-world-politics/75693-2014-02-21-12-17-49.html#ixzz2uHVTWfCJ

0 comments:

Post a Comment