இறை இல்லமான கஃபதுல்லாஹ்

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

நபி இல்லமான மதீனா முனவ்வரா

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

முன்னாள் கிப்லாவான பைத்துல் முகத்தஸ்

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

இந்தியாவின் இதயமான பாபரி மஸ்ஜித்

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

முஸ்லிம்களின் உயிரான திருக்கலிமா

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Friday, January 31, 2014

spain வரலாறு




மத்தியத் தரைக்கடல் வழியாக அட்லாண்டிக் மகா சமுத்திரத்திற்குள் நுழையும் ஒவ்வொரு கப்பலும் ஜிப்ரால்டர் ஜலசந்தியைக் கடந்தே சென்றாக வேண்டும் அல்லது அங்கு சிறிது தாமதித்து இளைப்பாறிச் செல்ல வேண்டும் என்பதுகட்டாயமாகும். இந்த ஜிப்ரால்டர் ஜலசந்தியானது ஐரோப்பாவின் தென்மேற்கு முனையில் மற்றும் மொராக்கோவுக்கு எதிர்புறமாக அமைந்துள்ளது.

சரி..! ஜிப்ரால்டர் என்று ஏன் அழைக்கப்படுகின்றது என்று தெரியுமா உங்களுக்கு? ஜிப்ரால்டர் என்பது ஜபல் அல் தாரிக் அல்லது ''தாரிக்(இப்னு ஸியாத்)மலைக்குன்று'' என்பதனை மொழிமாற்றி, சுருங்கச் சொல்லப் பொன்னால் அரபி மொழியை மோசடி செய்து, அதனை ஜிப்ரால்டர் என்று மேற்குலகு அழைத்துக் கொண்டிருக்கின்றது. இது நாம் காணப் போகும் வரலாற்று நாயகரான தாரிக் இப்னு ஸியாத் அவர்களின் பெயரைத் தாங்கித் தான் நிற்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகைய வரலாற்றுச் சிறப்புக்குச் சொந்தக்காரரைப் பற்றி நாம் இங்கு சிறிது காண்போமா..!

வரலாற்றிலிருந்து...

turkey வரலாற்றிலிருந்து...

மாபெரும் உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் கலீபா சுல்தான் 2ம் முராத் தனது மகன் முஹம்மத் 12 வயதை அடைந்ததும் அவனை கலீபாவாக நியமித்து விட்டு அணைத்துப் பொருப்புக்களிலிருந்தும் ஒதுங்கி தூர இடம் ஒன்றிற்கு சென்று விடுகிறார். முஹம்மதோ அறிவு, வால் வீச்சு, குதிரை ஓட்டம், போர் பயிற்சி என்று அணைத்திலும் சிறந்து விளங்கினும் போதிய அனுபவமற்றவனாக இருந்தான். இந்நிலையில் கிரீடம் தரித்து சில மாதங்கள் ஆவதற்குள் ரோம பேரரசு உஸ்மானிய சாம்ராஜ்யத்தின் மீது பாரியதொரு படையெடுப்பு மேற்கொண்டது. இதை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது முஹம்மதுக்கு மிகக்கடினமாக இருந்தது.
எனவே தந்தையின் உதவியை நாட முடிவு செய்தான். விரைவாக வந்து படைக்குத் தலைமை தாங்குமாறு தந்தைக்கு கடிதம் அனுப்பினான்.

பாலியல் – ஓர் இஸ்லாமிய பார்வை


பாலியல்-அகார் முஹம்மத்-

இன்றைய உலகு இருவகையான படையெடுப்புகளுக்கு முகங்கொடுத்து வருகின்றது. அவையாவன:
1. இராணுவ ரீதியான படையெடுப்பு
2. சிந்தனாரீதியான கலாசாரப் படையெடுப்பு
முதல்வகைப் படையெடுப்பைப் போலவே இரண்டாம் படையெடுப்பும் உலகில் பயங்கரவிளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது.

Syria: Past, Present and Future




Syria is depicted as an international pariah state, a supporter of terrorism who has gone to war with Israel on more than one occasion. The US regime has long argued that Syria's support for Hizbollah and Palestinian militants, its interference in Lebanon and its encouragement of militants in Iraq is highly irresponsible and not conducive to regional peace and stability. At the same time successive Syrian regimes have oppressed the Muslims and sought to undermine Islam. With the Arab Spring now firmly taking root in Syria the ummah has moved to change the status quo.

முஸ்லிம்களின் எதிரியாக தொடறும் மேற்கு அரச இயந்திரங்கள்

M.ஷாமில் முஹம்மட்

கடந்த ஞாயிற்று கிழமை இஸ்ரேலிய அமைச்சரவையில் உரையாற்றியுள்ள அதன் பிரதமர் நெதன்யாகு ஜெருசலம் இஸ்ரேலின்தலைநகராகவும் அதன் பிரிக்கமுடியாத அங்கமாக இருக்கும் என்று தெரிவித்து இஸ்ரேலின் சியோனிச கொள்கையை உறுதிப் படுத்தியுள்ளார் 1948 ஆம் ஆண்டு சட்டவிரோதமாக உருவாக்கப்பட்ட இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டு ஜெருசலத்தை கைப்பற்றியது அங்கிருந்த ஏழு இலட்சம் முஸ்லிம்களை வெளியேற்றியது ஜெருசலத்தின் மேற்கு பகுதி முழுவதும் யூத குடியேற்றங்களால் நிறைக்கப்பட்டது.

The Obama Doctrine, Pakistan and the "drawdown" from Afghanistan




Last week US President Barack Obama announced a timetable for withdrawal of 30 000 in Afghanistan.

This has been variously portrayed as defeat or a deliberate move that is part of an overall strategy.

The drawdown is in fact a sign of defeat, but is also part of an overall strategy for the region, much of which goes unsaid, for political reasons. But as such, it exemplifies to the full the Obama doctrine in foreign policy.

This doctrine has three key characteristics. These three qualities have characterised this presidency and are, in part, why some of those who lauded his arrival in the White House are more than a little disappointed.

சிறுபான்மையாக வாழும் முஸ்லீம்கள் செய்ய வேண்டிய பணி என்ன என்ன ?



சிறுபான்மையாக வாழும் முஸ்லீம்கள் செய்ய வேண்டிய பணி என்ன என்ன ? தற்காப்பு உணர்வு ஒவ்வொரு தனிமனிதனுக்கும் , சமூகங்களுக்குமான பொது விடயம் . ஆனால் முஸ்லீம் உம்மத்தை பொருத்தவரை இந்த தட்காப்புணர்வைக் கூட இஸ்லாத்தின் வரையறைக்கு வெளியில் இருந்து பெற்றுக்கொள்ள முடியாது . இஸ்லாமிய தெளிவற்ற சூழ்நிலை வாதத்தை முற்படுத்திய போராட்டப் பாதை என்பது காலத்தின் கட்டாயம் போல் இருந்தாலும், அதன் நகர்வின் விளைவுப் பெறுமானம் சரணடைவு

எதிர்காலக் கிலாஃபத்தின் இராணுவம்



உலகிலேயே முன்னேற்றமடைந்த தொழில்நுட்பத்தைக் கொண்ட உறுதியான இராணுவத்தைக் கொண்டதாக கிலாஃபத் ஆட்சி இருந்ததாக வரலாறு கூறுகிறது. கி பி 1453 இல் இஸ்தான்புல் ஐக் கைப்பற்றிய பீரங்கிப் படை இதற்கு முன்னுதாரணமாகும். ஐரோப்பிய நாடுகள் அன்று கிலாஃபத்தின் தீவிர சக்திக்கும் பொருளாதார வல்லமைக்கும் பயந்தன. இஸ்லாமிய இராணுவ வரலாற்றில் காலித் பின் வலீத் (ரலி), அமர் பின் அல்-அஸ் (ரலி), தாரிக் பின் சியாத் (ரலி), சலாஹுதீன் அயுபி, சுல்தான் முஹம்மது அல் பதிஹ்

பல முஸ்லிம் நாடுகள் அமெரிக்காவின் கொடூர விசாரணை முறைகளுக்கு உதவி !!

Camp X-Ray: the USs Prime Concentration Camp

அண்மையில் open society Foundation வெளியிட்ட அறிக்கை ஒன்றில்1, உலகின் 54 நாடுகள் சீ.ஐ.எ (C.I.A) இன் கொடூர விசாரணை முறைகளுக்கு இரகசியமாக உதவி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஆப்கானிஸ்தான், அல்ஜீரியா, அஜர்பைஜான், எகிப்து, இந்தோனேஷியா, ஈரான், ஜோர்டான், லிபியா, சிரியா, துருக்கி, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன், உஸ்பெகிஸ்தான், சவுதி அரேபியா போன்ற முஸ்லிம் நாடுகcம் அடங்கும்.

மனித உரிமைகள் அமைப்பு முஸ்லிம்களது உரிமைகளை பாதுகாக்குமா?




அமெரிக்கா தலைமையிலான பேரரசின் கீழ் நிறுவப்பட்டு தொழிற்படும் மனித உரிமைகள் அமைப்பு முஸ்லிம்களது உரிமைகள் மீறப்படும்போது அது குறித்து ஆக்கபூர்வமாக இதுவரைக்கும் எதுவித நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளதா?

சிரியாவின் மீதான அமெரிக்காவின் இராணுவ முன்னெடுப்பின் நியாயமற்ற காரணங்களும் அதன் உண்மையான முகங்களும்!



அமெரிக்கா கடந்த இரண்டு வருடமாக சிரியாவில் ஒரு இலச்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களை கொன்று குவிப்பதற்கு அனுமதித்தது மாத்திரமன்றி பல்லாயிரக்கணக்கான மக்கள் இடம்பெயரவும் காயப்படவும் அனுமதித்தது.

ஆனால், அமெரிக்கா இன்று “அல்கௌதா” எனும் இடத்தில் இரசாயன ஆயுதத் தாக்குதல் மேற்கொண்டதன் விளைவாகவே சுமார் 1400 பேர்

முஸ்லீம்களாகிய நாம் எமது போராட்டத்தை எங்கிருந்து தொடங்குவது !?




ரசூல் (ஸல் ) அவர்களது உம்மத்தைப் பொறுத்த வரையில் அந்த மக்கா காலப்பகுதி முதல் இன்றுவரை இஸ்லாத்தை தெளிவோடும் விரும்பியும் ஏற்ற நிலையிலோ அல்லது இன்றுபோல் புரியாமல் ஏற்றுக்கொண்ட நிலையிலோ ஒரு தனிப்பெரும் சித்தாந்தம் இஸ்லாம் என்ற வகையில் பின்வரும் அடிப்படைப் பிரச்சினைகளைத்தான் எதிர் கொள்கிறார்கள் .

உலக நாடுகளின் முஸ்லிம்களின் விகிதாசாரம்.




இவ்வளவு பெரிய உம்மத் இன்று பலவீனப்பட்டுள்ள பின்னணியை நாம் சரியாக உணர்ந்து உரிய பரிகாரத்தை தேடி ஈடேற்றம் பெற்ற முன்மாதிரியான சமூகமாக மாறவேண்டும்.

அதற்கு நாம் இன்று இழந்து நிற்கும் ஒரே இஸ்லாமிய தலைமை அவசிம். அதுவே எமது கேடயம்!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
“இமாம் ஒரு கேடயமாவார். அவருக்கு பின்னால் நின்று மக்கள் போர் புரிவார்கள். அவர் மூலமாக பாதுகாப்புத் தேடிக்கொள்வார்கள்.”
(அபூஹூரைரா (ரலி), முஸ்லிம்)

ஒரு முஸ்லிம் சிறுபான்மையாக வாழும் நாட்டில் எதிர்நோக்கும் சவால்கள்....?

 
முஸ்லிம்கள் சிறுபான்மையாக வாழும் பெரும்பாலான நாடுகள் தமது பொதுவாழ்வில் மதத்தின் தலையீடு இருக்கக் கூடாது எனும் கொள்கையுடன் வாழ்வினது விவகாரங்களை மனிதச் சிந்தனை அடிப்படையில் ஒழுங்குபடுத்தும் தாராண்மைவாதச் சிந்தனையுள்ள முதலாளித்துவ சிந்தனையில் கட்டியெழுப்பப்பட்ட நாடுகளாகும்.

இங்கு மனிதன் சட்டத்தை ஆக்கும் சட்ட சபைகளை கொண்டு வாழ்வினது பிரச்சினைகளுக்கான தீர்வை எட்ட முனைகிறான்.

ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற சர்வதேச இஸ்லாமிய அமைப்பு !


ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற சர்வதேச இஸ்லாமிய அமைப்பு !

ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற மூன்றாவது சர்வதேச இஸ்லாமிய அமைப்பு !
ஹிஸ்புத் தஹ்ரீர் என்ற அமைப்பு ஒரு சர்வதேச இஸ்லாமிய இயக்கமாகும் இந்த அமைப்பு உலகின் நாற்பது நாடுகளில் தற்போது இயங்குவதாகவும் 10 இலட்சம் உறுபினர்களை கொண்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன மற்றைய சர்வதேச இஸ்லாமிய இயக்கங்களான 1928 இல் இமாம் ஹஸனுல் பன்னா (ரஹ்) அவர்களால்

அமெரிக்கா ‘பயங்கரவாதம்’ என்று எதை சொல்கிறது



பயங்கரவாதம் (அல் இர்ஹாப்) என்ற பண்புப்பெயர்சொல்லானது மொழியியல் ரிதியில் ஆராயும்போது அது பயமுறுத்துதல் (அர்ஹபா) என்ற வினைச்சொல்லிலிருந்தே தோன்றுகின்றது. எனினும் 1979-ம் ஆண்டு அமெரிக்காவினதும், இங்கிலாந்தினதும் உளவுத்துறையினர் மாநாடொன்றினை நடத்தி “அரசியல் இலக்குகளை அடைந்து கொள்வதற்காக சமூகத்தின் பொது விருப்பத்திற்கு எதிராக வன்முறையை பிரயோகித்தல்” என்பதே பயங்கரவாதம் என்று அதன் அர்த்தத்தை அரசியல் ரிதியில் மாற்றின. இதன் தொடர்ச்சியாக சர்வதேச அளவில் பல கருத்தரங்குகள், ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டும், சட்டங்கள் இயற்றப்பட்டும் எந்த இயக்கங்கள், சங்கங்கள், கழகங்ககள்,

உலகை மயானமாக்கிவரும் ‘உலகமயமாக்கல்’



தாராளமயமாக்குதல் அல்லது உலகமயமாக்குதல் எனும் வார்த்தையை சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரர்களும் உருவாக்கினர். சர்வதேச எங்கும் ஒரு பொருள் பாவனையிலுள்ளது, அல்லது உலகின் பல பகுதிகளிலும் அப்பொருள் உற்பத்தி செய்யப்படுகிறது என்பதை விளக்குவதற்காக இந்த உலகமயமாக்கல் என்ற பதம் பிரயோகிக்கப்படவில்லை. மாறாக அப்பொருளை உற்பத்திசெய்பவர் உலகெங்கும் அதனை பொதுவான பொருளாக்கவேண்டும்; என்ற நோக்குடன் செயல்படும் முறைமையையே இவ்வார்த்தை குறிப்பிடுகிறது.

தேசியவாதம் பற்றி சில --




















கடந்த 200 வருடகாலமாக மேலைத்தேய நாடுகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ள இஸ்லாமிய தேசங்கள் பாரிய வீழ்ச்சியையும் பின்னடைவையும் தழுவியுள்ளன. இந்நிலையிலிருந்து விடுபடுவதற்கும் எழுச்சிப் பாதையில் வெற்றி நடைபோடுவதற்கும் முஸ்லிம்கள் பல்வேறு முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளனர். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முஸ்லிம்கள் மேலைத்தேய அரசியற் கருத்துகளின் அடிப்படையிலேயே தங்கள் விடுதலைப் போராட்டத்தை மேற்கொண்டனர். இக் கருத்துகளிற் பிரதானமானது தேசியவாதமாகும்.

முஸ்லிம் சமூகப் பிளவும், இஸ்லாம் சொல்லும் தீர்வும்



எல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்று முஸ்லீம்கள் தாங்கள் அறிவு தரவேறுபாட்டால் இஸ்லாத்திற்க்கு பல்வேறு வகையான விளக்கங்களை அளித்துக் கொண்டு ஒருவரை ஒருவர் வழிகேடர்கள் என்றும் முஷ்ரிக்குகள் என்று செல்லி திரிகிறார்கள். இப்படி அலைவது சரிதான ? இதற்க்கான தீர்வு தான் என்ன ? அல்லாஹ்வின் வேதமும் நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டல்கள் தான் என்ன என்று பார்ப்போம்.

இறை நம்பிக்கை கொண்டவர்களே அல்லாஹ்விற்குக் கட்டுப்படுங்கள், இன்னும் (அவனுடைய) தூதருக்கு கட்டுப்படுங்கள், உங்களில் அதிகாரம் உடையவர்களுக்கு கட்டுப்படுங்கள்.
(அல் குர்ஆன் 4:59)
 
இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள். மேலும் நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணமடைய வேண்டாம்.

அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்களின் எளிமையான ஆட்சி:



அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மறைவு, இறுதி நபித்துவத்தை நிறைவு செய்தது. அது மட்டுமின்றி சஹாபாக்கள், நபித் தோழர்களின் கிலாபத் ஆட்சிக் காலத்தையும் தோற்றுவித்தது.

நபிகள் நாதருக்குப் பின் அபூபக்கர் சித்திக்(ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அண்ணல் வாழ்ந்து காட்டிய அதே எளிமையில் ஆட்சி முறையை நடத்தினார்கள்.

இஸ்லாமிய அரசு ஹஜ்ஜை எவ்வாறு வழிநடத்தும்?




ஹஜ் கடமையை ஹாஜிகள் நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை நல்லமுறையில் செய்து கொடுக்க வேண்டியது முஸ்லிம்களின் ஒரே தலைமையான இஸ்லாமிய அரசின்மீது கடமையாகும். இஸ்லாத்தை அழிக்கவும், முஸ்லிம்களின் ஒற்றுமையை சிதைக்கவும் தொடர்ந்து சூழ்ச்சி செய்த மேற்கத்தியர்கள், இறுதியில் கி.பி. 1924 ஆம் ஆண்டு முஸ்லிம்களின் ஒரே தலைமையை வீழ்த்தினார்கள். இதனால் முஸ்லிம் நாடுகள் தோன்றின. ஆயிரத்து முன்னூறு ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் ஒரே அமீரின் கீழ் வாழ்ந்து வந்த காலகட்டத்தில் இஸ்லாமிய அரசே ஹஜ்ஜை சிறப்பாக வழிநடத்தியது. ஹஜ் கடமையை நிறைவேற்ற விசா இல்லாமல் மகிழ்ச்சியுடன் சென்றுவந்த அந்த காலகட்டங்களில், இஸ்லாமிய அரசான கிலாஃபத்தின் ஆளுகைக்குட்படாத நிலங்களில் வாழ்ந்துவந்த முஸ்லிம்களுக்கும் கலீஃபாவையோ அல்லது கலீஃபாவின் பிரதிநிதியையோ சந்தித்து முஸ்லிம் உம்மத் எதிர்நோக்கிய பிரச்சினைகளை கவனத்திற்கு கொண்டு செல்ல முடிந்தது.

ஆப்கான் சோவியத் யூனியன் வரலாறு பகுதி 3



ஆப்கான் சோவியத் யுத்தம் சூடு பிடித்திருந்த அந்த இறுதிப் பொழுதுகளில் அமெரிக்கா தனது அசிங்கம் மிக்க சுயநலக் கரம் ஆப்கான் முஜாஹிதீன்களுக்கு சார்பாக நேரடியாகவே பங்களிப்பு செய்திருந்தது போலக் காட்ட தனது மீடியாக்களை பல்வேறு வழிகளில் பாவிக்கத் தொடங்கியது .

ஆப்கன் யுத்தத்துக்கு நிதி சேர்க்கும் சாட்டில் மாபியாத் தனமாக ஹெராயின் ,கொகாயின் வியாபாரத்தை வேறு ஆப்கான் போடர்களில் படர விட்டிருந்த அமெரிக்கா , தான் எப்படியான ஆயுத உதவி செய்தேன் என்பதைக் காட்ட 'ஹோலிவூட் ' பாணியில் சொன்ன கதைதான் FIRST BLOOD (PART 3) அல்லது RAMBO (PART 3) திரைப்படம் ஆகும் .

ஆப்கான் சோவியத் யூனியன் வரலாறு பகுதி 2



அது வீரத்தின் நிலம் என்பது புரியாமல் கம்யூனிச செங்கரடி தன் நாஸ்திக சித்தாந்த நாகரீகத்தை ஆப்கானில் பதிக்க முனைந்தான் . அந்த வீர சமூகத்தை மண்டி போட வைக்க அலெக்சாண்டருக்கும் முடியாமல் போனது ! பிரிட்டிஷ் காரனுக்கும் முடியாமல் போனது ! என்பதை உணராமல், அல்லாஹ்வுக்கு மட்டுமே சிரம் சாய்த்த ஒரு சமூகத்தை மீண்டும் ஒருமுறை கம்யூனிசமும் மண்டி போடவைக்க முயன்று பார்த்தது . முடிந்ததா ?

'தாகூத்களுக்கு' அடிமைப்படுவதை விட சஹாதத் மேலானது என அந்த சமூகம் தெளிவாகவே முடிவெடுத்தது . ஆரம்பத் தோல்விகளில் அது அனுபவத்தைக் கண்டது . எதிரியை அளவிட்டது . USSR எனும் சுப்பர் பவரின் இராணுவ ,அதி நவீன ஆயுத வலிமை இங்கு சுவன ஆசையின் முன் செல்லாக் காசாக மாறியது . ஆப்கான் முஸ்லீம் உம்மத் கிடைத்ததைக் கொண்டே போராட்டத்தை தொடங்கியது .

ஆப்கான் சோவியத் யூனியன் வரலாறு பகுதி 1



சோவியத் யூனியன் (USSR ) என்ற பெயர் புதிய தலைமுறையினருக்கு சற்று அறிமுகமல்லாமல் போயிருக்கும் . கம்யூனிசத்தின் சித்தாந்தக் கடவுள் கார்ல் மார்க்ஸ் வடித்த' டாஸ் கபிடல் ' எனும் நூலின் 'தியரிக்கு' பிராக்டிகல் கொடுக்க 'லெனின் கிராட் ' எனும் இன்னொரு கடவுளால் உருவாக்கப் பட்ட தேசமே சோவியத் யூனியனாகும் . இன்று இந்த கூட்டு யூனியன்கள் எல்லாம் உடைந்து ரஷ்யா எனும் கௌரவப் பிச்சைக்காரனாக அது காட்சி தந்தாலும் அதன் அடாவடித்தனம் மட்டும் குறைந்த பாடில்லை .

" அரசியல் அதிகாரம் என்பது துப்பாக்கி பரல்களில் இருந்து பிறக்க வேண்டும் " என்ற வார்த்தைகளின் வடிவமான இந்த தேசத்தின் உண்மை பலருக்கு புரியும் போது, தங்கள் நெற்றிகளுக்கு முன்னாலும் ஒரு துப்பாக்கி தோட்டாவை துப்பத் தயாராக இருந்தது மட்டுமே கடைசிப் பார்வையாக இருந்தது .

"நூறு பேச்சு மேடைகளும் , ஆயிரம் துண்டுப் பிரசூரங்களும் சாதிக்காததை ஒரு துப்பாக்கித் தோட்டா சாதித்து விடும்" என்ற இவர்களின் இரண்டாம் கடவுள் 'லெனின் கிராட் ' சொன்னதை கச்சிதமாக செய்தது அதன் உளவுப் பிரிவான கே .ஜி .பி . யும் ,அதன் இராணுவமும் .

நாஸ்திக வாத அகீதாவை கொண்ட இந்த சோவியத் யூனியன் எனும் வல்லரசோடு முஸ்லீம்கள் பலப்பரீட்சை செய்த முதல் களமே ஆப்கானிஸ்தான் .இந்த செங்கரடிகளின் இராணுவ மேலாதிக்க வாதத்தின் அழிவுக் கதவுகளை ஆப்கான் உத்தியோக பூர்வமாக திறந்தது 1970 களின் இறுதிப் பகுதியிலேதான் ஆகும் .

1990 கள் வரை தொடர்ந்த இந்த பலப்பரீட்சை மூட்டை முடிச்சுகளோடு ஆப்கானை விட்டு சோவியத் இராணுவம் வெளியேறியவுடன் அதன் இராணுவ வலிமை பற்றிய 'இமேஜ்' ஜுஜூபி வடிவத்தை அடைந்தது .இந்தப் போரில் இன்னொரு பார்வையாக புரிந்து கொள்ள வேண்டிய உண்மை என்னவென்றால் வியட்நாமின் படு தோல்விக்கு சோவியத் யூனியனை பழிவாங்க அமெரிக்காவுக்கு நல்ல சந்தர்ப்பமாகவும் ஆகியதாகும் .

சோவியத் ஆப்கானில் அடைந்த இராணுவத் தோல்வி மற்றும் அதன் ஆட்சித் தலைவராக இருந்த மிக்கைல் கொர்பச்சோ வழங்கிய சீர்திருத்தக் கொள்கைகள் என்பன கொம்யூனிச அகீதாவை அங்கு கோமா நிலைக்கு ஆக்கி முதலாளித்துவத்திடம் சரண்டராகும் நிலைக்கு ஆக்கியது .இரண்டாம் உலக மகா யுத்தத்தின் பின் தொடர்ந்த பனிப்போர் எனும் ஆதிக்கச் சண்டைக்கு முற்றுப் புள்ளியும் வைத்தது . இந்த தோல்வி அரசியலின் முடிவுரைப் பந்தி ஆப்கான் களத்தில் இருந்துதான் எழுதப் பட்டது என்பது 'ஓபன் சீக்கிரட்' .

தெற்காசியாவில் இருந்த அதிகம் அறியப்படாத ஒரு முஸ்லீம் பெருநிலத்தை உலக முஸ்லீம் உம்மாவின் இதயங்களில் பசுமையாக விதைத்ததும் இந்த தியாகப் போராட்டம்தான் என்றால் அதுவும் மறுக்க முடியாதது .அதேபோல கம்யூனிச பிசாசை விரட்ட அமெரிக்கா எனும் பூதம் ஏன் பின்னால் நிற்கின்றது !? என்பதை உணராமல் முஸ்லீம் உம்மா போராடிய தவறும் மறுக்க முடியாதது தான் ஆகும் .

'புரபிட் அன்ட் பெனிபிட் பேசில்' துரோகத்தனமான 'டபுள் கேம்' கொடுப்பது U .S பொலிசியின் பிரதான எண்ணக்கரு என்பது புரியாமல் ,அந்த முதலாளித்துவம் விரித்த சதிவலையில் நாஸ்திக செங்கரடிகள் எதிர்ப்பு என்ற ஒருபக்க பார்வையை மட்டுமே முஸ்லீம் உம்மத் பதித்தது .

'அல்லாஹு அக்பர்' என கையில் இருந்த 'கிளஸ் நிகோ ரைபிளின் ரிகரை ' தட்டுவது பற்றி இருந்த ஆர்வம் ,தனது தலையில் இருந்த சிந்தனை 'ரிகரை தட்டுவதில் இந்த உம்மாவுக்கு அன்று இருக்கவில்லை .நாஸ்திக அகீதாவுக்கு எதிரான கடுமையான பார்வை நாசகரமான 'செக்கியூலரிச முதலாளித்துவக் கடவுளின் ஆதிக்கம் பற்றி மற்றும் குள்ளநரித்தனம் பற்றி ஆராய விடவில்லை . அது எப்படியான திட்டமிடல் !? நடந்தது என்ன !? இன்ஷா அல்லாஹ் இன்னொரு பதிவில் தருகிறேன்.

எகிப்து படுகொலைகள் – சவூதி நயவஞ்சக அரசியலின் பின்னணி




ஜமால் அப்துல் நாசர் – 16 வருடங்கள்

அன்வர் சதாத் – 11 வருடங்கள்

ஹோஸ்னி முபாரக் – 31 வருடங்கள் என

மொத்தம் 58 வருடங்கள் மூன்று சர்வதிகாரிகளின் கீழ் பொறுமையாய் இருந்தஎகிப்து மக்களால் தங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி முர்சியின்ஆட்சியை ஒரு வருடம் கூட பொறுத்து கொள்ள முடியாமல் போனதுஆச்சர்யப்பட கூடிய ஒரு எதேச்சையான நிகழ்வு அல்ல. மாறாக இதன்பின்னால் திட்டமிட்டு உருவாக்கப்பட்ட நயவஞ்சக வெறுப்பு அரசியல்இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாத்திற்கு எதிராக சவூதி மன்னர் பல இலட்சங்களை செலவிடுகின்றார்




தீவிரவாத தடுப்பு மையத்திற்கு நிதி உதவியாக ஐக்கிய நாடுகள் சபைக்கு சவூதி மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜிஸ் 100 மில்லியன் டாலரை அளிக்க இருப்பதாக செய்தி நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. நோன்பு பெருநாள் அன்று ஆற்றிய உரையில் சவூதி மன்னர்“ஐக்கிய நாடுகள் சபைக்கு கீழ் இயங்கும் இந்த மையத்தின் செயல்பாடுகளுக்கு உதவும் வகையாக 100 மில்லியன் டாலரை வழங்க இருக்கின்றேன்” என்று கூறியதாக சவூதி செய்தி நிறுவனம் அறிவித்தது. மேலும்பயங்கரவாத சக்திகளை’முறியடிப்பதற்காக இந்த மையத்திற்கு சர்வதேச சமுதாயம் உதவ வேண்டும்

உலக பொருளாதார நெருக்கடிக்கு வயது ஏழு



உலகை உலுக்கிய பொருளாதார நெருக்கடி 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் ஆறாம் ஆண்டை பூர்த்தி செய்து இப்போது ஏழாம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. ஐரோப்பிய யூனியனைச் சார்ந்த அதிகாரிகள் ஐரோப்பிய கண்டத்தில் “recession” என்று சொல்லக்கூடிய பொருளாதார பின்னடைவு முடிவுக்கு வந்துவிட்டதாகவும், பொருளாதாரம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கின்றது எனவும்,அதை உண்மைப்படுத்துவது போன்ற புள்ளியியல் விபரங்களையும் அறிவித்தனர்.

கிலாஃபத்தை தாக்கிப் பேசிய ரஷ்ய வெளியுறவு அமைச்சர்


قَدْ بَدَتِ الْبَغْضَاء مِنْ أَفْوَاهِهِمْ وَمَا تُخْفِي صُدُورُهُمْ أَكْبَرُ قَدْ بَيَّنَّا لَكُمُ الآيَاتِ إِن كُنتُمْ تَعْقِلُونَ
அவர்கள் உங்கள் மேல் கொண்டுள்ள கடுமையான வெறுப்பு அவர்கள் வாய்களிலிருந்தே வெளியாகிவிட்டது. அவர்கள் நெஞ்சங்கள் மறைத்து வைத்திருப்பதோ இன்னும் அதிகமாகும்;. நிச்சயமாக நாம் (இது பற்றிய) ஆயத்களைத் தெளிவு படுத்திவிட்டோம்;. நீங்கள் உணர்வுடையோரானால் (இதை அறிந்து கொள்வீர்கள்).                                                       (ஆல இம்ரான் 118)

அமெரிக்கா எதற்காக ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற நினைக்கிறது


 ஆப்கானிஸ்தானிலிருந்து 2014 ஆம் ஆண்டு அமெரிக்கா வெளியேறுவது குறித்து சமீப காலமாக நிறைய செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன.எனவே  அமெரிக்காவின் ஆப்கானிய குறிக்கோள் நிறைவேறிவிட்டதா? அல்லது இது வெறும் தந்திரமான நகர்தலா என்பதை ஆய்வு செய்யவேண்டியது அவசியமாகும்.
அமெரிக்காவிற்கு  முக்கியத்துவம் வாய்ந்த பிராந்தியங்களில் ஒன்றாக ஆப்கானிஸ்தான் விளங்குகிறது. ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுக்க பின்வரும் காரணங்கள்  முக்கியமானவையாகும்.
1. யுரேசியா பகுதியில் ரஷ்யா மற்றும் சீனா ஆதிக்கம் செலுத்துவதை தடுத்து நிறுத்துவது.
2. கிலாஃபா வருவதை தடுப்பது.
3. காஸ்பியன் கடல் மற்றும் மத்திய கிழக்கு பகுதியிலுள்ள இயற்கை எரிவாய்வு மற்றும் பெட்ரோலிய  வளங்களை  தன்னுடைய  ஆதிக்கத்தின்கீழ் தக்கவைத்துக்கொள்வது.
4.காஸ்பியன் கடல் மற்றும் மத்திய கிழக்கு பகுதிகளிலுள்ள எரிவாய்வு போக்குவரத்து பாதுகாப்பை தன் கட்டுக்குள் வைத்திருப்பது.
இதை கீழ்கண்ட ஆதாரத்திலிருந்து அறிந்து கொள்ளலாம்.

இஸ்லாத்தின் பார்வையில் மக்களாட்சி!



முதலாளித்துவக்கொள்கையின் ஆட்சிமுறையில் அனைத்து ஆட்சி அதிகாரமும் மக்கட்கேயாகும். எனவே மக்களே தமக்காக சட்டமியற்றுபவர் ஆவர். அவர்களே தாம் விரும்பிய சட்டத்தை நடைமுறைபடுத்தும் அதிகாரம் பெற்றவர்கள்.

மக்களாட்சிமுறையில் ஆள்வது இறைநம்பிக்கையற்ற முறையில் ஆள்வதாகும்.

மக்களாட்சி முறைக்காக அழைப்பு விடுப்பது குஃப்ர் முறைக்காக அழைப்பு விடுப்பதாகும். இஸ்லாத்தில் இது முற்றிலும் தடுக்கப்பட்டதாகும்.

“லஷ்கர்-ஏ-தொய்பா” - பற்றிய அமெரிக்க இந்திய எச்சரிக்கைகளின் அடிப்படைகள் என்ன?



by: Salahudeen Iyoobi

“லஷ்கர் ஏ-தொய்பா“. இந்த உருது மொழியின் தமிழ் மூலம் என்ன தெரியுமா?, “இறைவனின் இராணுவம்”. இந்திய கட்டுபாட்டில் உள்ள ஜம்மு காஷ்மீரை இராணுவ மற்றும் அங்குள்ள மக்கள் வலுவை கொண்டு பிரித்து ஆஸாத் காஷ்மீருடன் இணைத்து அதனை பாகிஸ்தானிடம் தாரை வார்க்கும் புரொக்ஜெட்டின் பெயர் என்றும் சொல்லலாம். காஷ்மீரின் பள்ளத்தாக்கு கிராமமான சிட்டிசிங்புரா தாக்குதலில் ஆரம்பித்து இந்திய நாடாளுமன்றம் மீதான தாக்குதல் வரை அது தன்னை தெளிவாகவே இந்தியாவிற்கு அடையாளப்படுத்தியுள்ளது.

ஓமர் முக்தாரின் போராட்டமும் ஈழப் போராட்டமும் ஒரு ஒப்பீடு ....



ஈழ விடுதலையின் பெயரில் அகதியாக்கப்பட்ட 'சோனி ' எனும் முஸ்லிமின் நினைவுகளில் இருந்து (PART 09)

“ஓமர் முக்தார்” முசோலினியின் ஃபாசிச காலனியாதிக்க வெறியில் சீரழிந்த லிபியா நாட்டின் ‘முஸ்லீம் ’ போராளிதான் ஓமர் முக்தார். ஓமர் சுமார் 20 ஆண்டுகள் இத்தாலிய ஆதிக்க வெறியைச் சமாளித்து எதிர்த்து நின்று, 1931ல் ஒரு போரில் காயம்பட்டு, இத்தாலிய ராணுவத்தினால் கைது செய்யப்பட்டு, பழி சுமத்தப்பட்டு அவரது மக்களுக்கு முன்பாகவே தூக்கிலிடப்பட்டார்.

பர்மா : சர்வதேச சமூகத்தின் வெட்கக்கேடான மெளனம்


பர்மா : சர்வதேச சமூகத்தின் வெட்கக்கேடான மெளனம் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பர்மாவில் முஸ்லீம்களுக்கு எதிராக நடக்கும் இன ஒழிப்பு நடவடிக்கைகள் முஸ்லீம் சமூகத்திற்கு புதிய ஒன்றல்ல. அது போல் முஸ்லீம் சமூகத்தின் மீதான தாக்குதலை மூடி மறைக்கும் ஊடக துறையின் நயவஞ்சகத்தனமும் புரிந்து கொள்ள முடியா ஒன்றல்ல. எனினும் தற்போது முஸ்லீம் ஊடகங்கள் உள்ளிட்ட மெயின் ஸ்டீரிம் மீடியா என்றழைக்கப்படும் பொது மீடியாவின் பலத்த மெளனம் முஸ்லீம்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது மறுக்க முடியாத ஒன்று. முஸ்லீம்களின் மீதான வன்முறைகள் குறித்து பொது ஊடகங்களிலும் தேடினாலும்

ஒரு முஸ்லிமின் தேசியமும் அவனது இறை நம்பிக்கையும்

இஸ்லாம் மனிதர்களுக்கு மகத்தானதோர் வாழ்க்கை வழிகாட்டுதலை வழங்கிற்று. பண்பாடு நாகரிகம் அறிவியல் அத்தனையிலும் அது நேரானதோர் பாதையைப் போட்டுத்தந்தது. அதேபோல் இஸ்லாம் புதியதோர் மனித உறவையும் உறவின் முறையையும் வழங்கிற்று. இஸ்லாமிய வழிகாட்டுதல்களின் படி அனைத்து உறவுகளும் பிணைப்புகளும் அல்லாஹ்விடமிருந்து வருவதே. இஸ்லாம் மனிதர்களை அவர்களின் தான்தோன்றித்தனங்களிலிருந்து விடுவித்து இறைவனின் பக்கம் திருப்பிட வந்த மகத்தான மார்க்கம். இறைவன் ஒருவனே அவனே அனைத்தையும் படைத்து உணவளித்து வருகின்றான்.

இஸ்லாமியக் கோட்பாடுகளும் கலாச்சாரமும்

ஆறாவது அத்தியாயத்தில் இஸ்லாத்தின் முதல் அடிப்படையாம் லாஇலாஹ இல்லல்லாஹ_ முஹம்மதுற் றஸ_லுல்லாஹ் என்பதன் பொருளை விரிவாகப் பார்த்தோம். அதில் அனைத்து அதிகாரமும் ஆற்றலும் ஆளுமையும் அல்லாஹ்வுக்கே சொந்தம் என்பதைத் தெளிவுப்படுத்தினோம். இந்த அத்தியாயத்தில் அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அறிவும் ஆற்றலும் அவனுக்கே சொந்தம் என்ற அடிப்படையில் அறிவுத்துறையின் சில யதார்த்தங்களைப் பார்ப்போம். அத்தோடு அறிவியல் அறிவு கலைகளைப் பற்றிய அறிவு இவற்றிற்கும் அல்லாஹ்வின் ஆளமைக்கும் (அனைத்தும் அல்லாஹ்விடமிருந்து வருவதே - அறிவும் ஞானமும் அவனிடமிருந்து வருவதே என்பதற்கும்) உள்ளத் தொடர்புகளையும் விவாதிப்போம். அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம் அனைத்தின் மீதும் அல்லாஹ்வே ஆற்றல் பெற்றவன். எல்லா அதிகாரமும் அல்லாஹ்வுக்கே சொந்தம்

இஸ்லாம் மட்டுமே இயல்பான நாகரிகம்

இஸ்லாத்தின் பார்வையில் உலகில் இரண்டே சமுதாயங்கள்தாம் உண்டு. ஒன்று இஸ்லாமிய சமுதாயம் இன்னொன்று ஜாஹிலிய்ய சமுதாயம் என்ற அஞ்ஞான சமுதாயம். இஸ்லாமிய சமுதாயம் என்பது அல்லாஹ் ஒருவனே என்பதை நம்பி அந்த அல்லாஹ் காட்டிய வழியில் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் அமைத்துக் கொள்கின்ற சமுதாயம். ஜாஹிலிய்ய சமுதாயம் என்பது அதாவது அஞ்ஞான சமுதாயம் என்பது இஸ்லாத்தைப் பின்பற்றாத சமுதாயம். ஒரு சமுதாயத்தில் அங்கம் வகிப்பவர்கள் தங்களை முஸ்லிம்கள் என அழைத்துக் கொண்டிருக்கின்றார்கள். தொழுகை நோன்பு ஹஜ் போன்றவற்றையும் நிறைவேற்றி வருகின்றார்கள். ஆனால் ஷாPஅத் என்ற அல்லாஹ்வின் சட்டங்களைச் சட்டை செய்வதில்லை. இந்தச் சமுதாயத்தை இஸ்லாமிய சமுதாயம் எனக் கொள்ள முடியாது. இன்றைக்கிருக்கின்ற சூழ்நிலைகளுக்கேற்ப வாழும் இஸ்லாத்தைக் கற்றுத் தருகின்றோம்.

ஜிஹாத்


 
அல்லாஹ்வின் வழியில் போர் நாடறிந்த நாமறிந்த பேரறிஞர் இப்னுகைய்யும் இவர் எழுதிய நூல் சாத் அல்மாஅத். இந்த நூலில் ஒரு அத்தியாயம் அந்த அத்தியாயத்தின் பெயர் இறைத்தூதர் (ஸல்)அவர்கள் இறை மறுப்பாளர்களையும் நயவஞ்சகர்களையும் தன் திருத்தூது துவங்கியது முதல் தன் மரணம் வரை நடத்தியவிதம்: இந்த அத்தியாயத்தில் இந்த அறிஞர் அல்லாஹ்வின் வழியில் போரிடுவது என்பது என்ன? என்பதைச் சுருக்கமாக விளக்கியுள்ளார். அதனை இங்கே காண்போம். இறைவன் தன் திருத்தூதருக்கு அறிவித்த முதல் இறை அறிவிப்பு - முதல் இறை வெளிப்பாடு: படைத்த உமதிறைவனின் திருநாமத்தால் நீர் ஓதவீராக -- அல்குர்ஆன் : 96:1. இது தான் இறைத்தூதுத்துவத்தின் ஆரம்பம். இதை அல்லாஹ் தன் திருத்தூதரிடம் ஓதிடப் பணித்தான். இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்வதற்கான கட்டளை அப்போது இடப்படவில்லை. பின்னர் இறைவன் கூறுகின்றான். போர்த்திக் கொண்டிருப்பவரே எழுந்து எச்சரியும் இந்தக் கட்டளை பிரச்சாரம்

முஸ்லிம் சமுதாயத்தின் இயல்புகளும் புனரமைப்பும்

இறைவனின் தூதர்கள் அனைவரும் கொண்டு வந்த தூது:
இறைவனின் தூதுவர்கள் அனைவரும் கொண்டு வந்த செய்தி ஒன்றே ஒன்று தான் அது லா இலாஹ இல்லல்லாஹ_. அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதே. முஹம்மத் (ஸல்)அவர்கள் வரிசையாக வந்த இறைவனின் தூதர்களில் இறுதித் தூதர் ஆவார்கள். வரலாற்றில் அன்றுமதல் இன்றுவரை இந்தத் தூது மாறாமல் இறைவன் ஒருவனே என்பதாய்த்தான் இருந்து வந்தது. மனிதர்கள் தங்களைப் படைத்தவனும் தங்களுக்கு உணவளிப்பவனும் அந்த அல்லாஹ் ஒருவனே என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும் அந்த அல்லாஹ்வுக்கு மட்டுமே தலைதாழ்த்த வேண்டும். அடிபணிந்திட வேண்டும்.

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கற்கள் என்ற நூலிலிருந்து... பகுதி 2

திருக்குர்ஆன் உருவாக்கிய ஒப்பற்ற சமுதாயம்
இஸ்லாத்தை மீண்டும் நிலைநாட்டிட வேண்டும். இஸ்லாத்தின் ஒளியில் முஸ்லிம்களைப் புனரமைத்திட வேண்டும் என் விழைவோர், ஓர் வரலாற்று உண்மையை ஊன்றிக் கவனித்திட வேண்டும். இது இஸ்லாத்தின் பக்கம் மக்களை அழைத்திடவும் முஸ்லிம்களை முறையாகப் பயிற்றுவித்திடவும் பெரிதும் பயன்படும். வரலாற்றின் ஒரு காலக்கட்டத்தில் இந்தத் திருத்தூது இஸ்லாம் ஒரு பெரும் சமுதாயத்தை உருவாக்கிற்று. அந்த சமுதாயம் நபிகள் பெருமான்(ஸல்) அவர்களின் தோழர்கள் என்ற முதல் சமுதாயம் தான். இந்த முதல் சமுதாயத்தைப் போன்றதொரு சமுதாயத்தை வரலாற்றின் பிந்தைய காலக்கட்டத்தில் ஏன் மனித வரலாற்றின் எந்தக் காலக்கட்த்திலும் நாம்

கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது - பகுதி 04

'கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது' என்பதை மிக ஆழமாக ஆராயும், காலம் சென்ற பலஸ்தீனிய அறிஞர் அஷ் ஷேக் அப்துல் கதீம் ஸல்லும் (ரஹ்) எழுதிய 'கைப குதிமத்துல் கிலாஃபா' என்ற அரபு நூலின் தமிழாக்கத்தை இங்கே பகுதி பகுதியாக வழங்குகிறோம்!


தேசியவாதத்தையும் பிரிவினைவாதத்தையும் மேற்கத்திய அரசுகள் தூண்டுதல்

ஐரோப்பிய நாடுகள் குறிப்பாக பிரிட்டன், ஃபிரான்ஸ் மற்றும் ரஷ்யா ஆகியவைகள் கிலாஃபா அரசை வீழ்த்த வேண்டும் என்று தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வந்தன. எனினும் இந்த முயற்சியில் திட்டமிட்ட யுத்தங்கள், இராணுவ ஆக்கிரமிப்புகள் மற்றும் தொடர்ச்சியான போர்கள் ஆகியவற்றின் மூலம் கிலாஃபா அரசின் முதுகில் குத்தும் முயற்சியை அவைகள் மேற்கொண்டபோதிலும் அவை அனைத்தும் தோல்வியில்

கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது - பகுதி 03

'கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது' என்பதை மிக ஆழமாக ஆராயும், காலம் சென்ற பலஸ்தீனிய அறிஞர் அஷ் ஷேக் அப்துல் கதீம் ஸல்லும் (ரஹ்) எழுதிய 'கைப குதிமத்துல் கிலாஃபா' என்ற அரபு நூலின் தமிழாக்கத்தை இங்கே பகுதி பகுதியாக வழங்குகிறோம்!

இஸ்லாமிய அரசிற்கு எதிராக பிரிட்டன் மேற்கொண்ட சதித்திட்டங்கள்

சவூதி ஆட்சியாளர் பிரிட்டன் அரசின் விசுவாசமிக்க கங்காணி என்பதை கிலாஃபா அரசும் ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் ரஷ்யா போன்ற மேற்கத்திய வல்லரசுகளும் நன்கு அறிந்திருந்தன. மேலும் சவூதி ஆட்சியாளர், பிரிட்டன் அரசின் வழிகாட்டுதல் அடிப்படையில் இயங்கினார் என்பதும் நன்கு அறியப்பட்ட ஒன்றாகும்.

கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது - பகுதி 02 (வஹ்ஹாபிகளின் தோற்றமும் சவூதி அரசின் உருவாக்கமும் )

கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது - பகுதி 02

'கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது' என்பதை மிக ஆழமாக ஆராயும், காலம் சென்ற பலஸ்தீனிய அறிஞர் அஷ் ஷேக் அப்துல் கதீம் ஸல்லும் (ரஹ்) எழுதிய 'கைப குதிமத்துல் கிலாஃபா' என்ற அரபு நூலின் தமிழாக்கத்தை இங்கே பகுதி பகுதியாக வழங்குகிறோம்!

இஸ்லாமிய அரசிற்கு எதிராக ஐரோப்பிய அரசுகள் மேற்கொண்ட சதித்திட்டங்கள்
முஸ்லிம்களின் நிலப்பரப்புகளை பங்கீடு செய்துகொள்வது தொடர்பாக காஃபிர்களுக்கு மத்தியில் கருத்து முரண்பாடுகள் இருந்துவந்த போதிலும் இஸ்லாத்தை அழிக்கும் சிந்தனையில் அவர்கள் அனைவரும் ஒருமித்த கருத்தை கொண்டிருந்தார்கள். இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு அவர்கள் பல்வேறு வழி முறைகளை கையாண்டார்கள். துவக்கத்தில் முஸ்லிம்களை சிந்தனை ரீதியாக பலவீனப்படுத்தும் நோக்கத்தோடு

கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது - பகுதி 01

கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது - பகுதி 01

'கிலாஃபத் எவ்வாறு வீழ்த்தப்பட்டது' என்பதை மிக ஆழமாக ஆராயும், காலம் சென்ற பலஸ்தீனிய அறிஞர் அஷ் ஷேக் அப்துல் கதீம் ஸல்லும் (ரஹ்) எழுதிய 'கைப குதிமத்துல் கிலாஃபா' என்ற அரபு நூலின் தமிழாக்கத்தை இங்கே பகுதி பகுதியாக வழங்குகிறோம்!

இஸ்லாத்திற்கும் குஃப்ருக்கும் இடையிலான போராட்டம்
இஸ்லாம் அருளப்பட்ட நாளிலிருந்து இஸ்லாமிய சிந்தனை களுக்கும் குஃப்ர் சிந்தனைகளுக்கும் மத்தியிலும் முஸ்லிம்களுக்கும் காஃபிர்களுக்கும் மத்தியிலும் போராட்டம் உருவாகிவிட்டது. அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அனுப்பப்பட்ட துவக்க காலத்தில் இந்த போராட்டம் அறிவார்ந்த

கிலாபத் எவ்வாறு அழிக்கப்பட்டது - ஒரு சுருக்க வரலாறு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களினால் இஸ்லாமிய கிலாபத் எப்போது மதீனாவில் நிறுவப்பட்டதோ அன்றைய தினத்திலிருந்து உதுமானிய பேரரசு 1924ம் ஆண்டு முஸ்தபா கமால் அதாதுர்க்கினால் வீழ்த்தப்படும் வரை கிலாபத் இந்த உலகில் நிலை கொண்டிருந்தது. கிலாபத் வீழ்த்தப்பட்ட குறித்த இந்த காலகட்டத்தில் கிலாபத் அரசு பலகீனமடைந்திருந்ததுடன் அதனது தூய்மையான சிந்தனைத்தரம் வலுவிழந்திருந்தது. முஸ்லிம் தேசத்தை ஆக்கிரமிப்பதற்காக முஸ்லிம்களின் படைகளுடன் போராடிப்போராடித் தோல்வி கண்டு களைத்துப் போயிருந்த காபிர்கள் இனிமேலும் இவர்களுடன் ஆயுத ரியாக போராடி வெற்றி கொள்ள முடியாது என்ற மனோ நிலைக்கு வந்திருந்தார்கள். எனவே அவர்கள் மாற்று திட்டம் குறித்து சிந்திக்கத் தொடங்கியிருந்த வேலையில் முஸ்லிம்களின் அடிப்படை வலிமையான இஸ்லாமிய சிந்தனையினை பலகீனப்படுத்துவதற்கு இக்காலகட்டத்தில் கிலாபத்தில் காணப்பட்ட பலகீனங்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார்கள்.

கிலாபத் ஒப்பந்தம் – انعقاد الخلافة

கிலாபத் என்பது சுயவிருப்பத்துடன் தேர்வுசெய்யும் ஒரு ஒப்பந்தமாகும் ஏனெனில் அது அதிகாரத்தில் உள்ளவருக்கு கட்டுப்படுவதாக கொடுக்கப்படும் வாக்குறுதியாக இருக்கிறது, ஆகவே பைஅத் பெறுகின்ற நபர் கிலாபத் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தெரிவிக்கும் சம்மதமும் பைஅத் கொடுப்பவர் குறிப்பிட்ட நபர் கலீபாவாக நியமிக்கப்படுவதற்கு தெரிவிக்கும் சம்மதமும் முக்கியமான நிபந்தனைகளாகும், இதனடிப்படையில் ஒருவர் கலீபா பொறுப்பை ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் அல்லது தயக்கம் காட்டினாலும் அவரை வற்புறுத்தலுக்கு உள்ளாக்கக்கூடாது, அதற்கு மாற்றாக வேறொரு நபரை தேர்வுசெய்யவேண்டும், மேலும் மக்களிடம் நிர்பந்தமான முறையில் பைஅத் பெறுவதற்கும் அனுமதியில்லை ஏனெனில் இத்தகைய விதத்தில் பைஅத் பெற்றால் அது சட்டரீதியாக செல்லுபடி ஆகாது,

தாருல்-இஸ்லாம் என்பது என்ன?

கிலாஃபத் என்றால் என்ன?

கிலாஃபத் என்பதாவது உலகளாவிய முறையில் முஸ்லிம்கள் அனைவருக்குமான தலைமைத்துவமும், இஸ்லாமிய ஆட்சி முறையுமாகும் .அது அல்லாஹு (சுபு) அருளிய சட்டதிட்டங்களின் படி ஆட்சிபுரிவதாகும்.

கிலாஃபத் என்பது இமாராஹ் எனவும் அழைக்கப்படும். இரண்டும் ஒரே பொருளைக் குறிக்கின்ற வெவ்வேறு வார்த்தைகளாம்.

ஒற்றுமையை ஏற்படுத்தத் தேவையான ஒன்று என்ன?


ஒற்றுமை என்பது குர்ஆன் சுன்னா அடிப்படையில் உருவாக்கப்படவேண்டும்! 

அந்த ஒற்றுமையை ஏற்படுத்தத் தேவையான இஸ்லாம் இழந்துள்ள தலைமை உருவாக்கப்பட்டால் மாத்திரமே நிரந்தரமாக உம்மத் ஒன்றுபடுத்தப்படும்! காரணம் மேற்கினது சிந்தனைத் தாக்கத்திற்குற்பட்டதாக இன்று உம்மத் காணப்படுகிறது.

முஸ்லிம் நாட்டுத் தலைமைகள் மேற்கினது பிரித்தாளும் யுக்தியினது அடிவருடிகளாக மாறி அவர்களது சுயநலன்களுக்காக உம்மத்தை சுரண்டிவாழ்வதுடன் தீனுள் இஸ்லாத்தை குழிதோண்டிப் புதைப்பதனை நாம் காணலாம்.

ரஷ்யாவை நோக்கி சரிதிறதா சவுதி?


                                  


Al Mukhabarat Al A'amah. என்றால் என்ன தெரியுமா?. சவுதி அரேபியாவின் உளவு ஸ்தாபனம். மன்னரிற்கு விசுவாசமாக செயற்படும் இரகசிய அமைப்பு. இதன் ஆங்கில கருத்து (GIP - General Intelligence Presidency). உளவறிதல், சவுதி அரசர் இடும் கட்டளைகளை இரகசியாமாக செயற்படுத்தல் போன்ற வேலைத்திட்டங்களை இது செய்கிறது. 1956-ல் கிங் அப்துல் அசீஸ் அல் சவுத்தினால் தேசிய தேவை கருதி இது உருவாக்கப்பட்டது.

சவுதி அரேபியாவின் உளவுப்பிரிவும் அல்-கடாபியின் உளவுப் பிரிவின் தலைவறும் சந்தித்தனர்



பந்தர் பின் சுல்தான். சவுதி அரேபியாவின் உளவுப்பிரிவு டைரக்டர் ஜெனரல். அதாவது Al Mukhabarat Al A'amah-வின் அமீர். சவுதி ரோயல் அரசாட்சியின் அபிலாஷைகளிற்கு முழு வடிவம் கொடுப்பவர். அமெரிக்காவின் நண்பர். இன்நாட்களில் விளாடிமிர் புட்டினின் நண்பரும் கூட. அண்மையில் அவர் சவுதி அரசிற்கு நன்மைபயக்கும் ஒரு முக்கியமான காரியத்தை செய்து முடித்துள்ளார். லிபியாவின் அதிபர் கேர்ணர் முஹம்மர் அல்-கடாபியின் உளவுப் பிரிவின் தலைவரான Moussa Koussa-வை தனது கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளார். அதாவது அவரை சவுதியின் நண்பனாக மாற்றியுள்ளார்.

Tuesday, January 21, 2014

இந்திய இராணுவம்: ஊழலில் நம்பர் 1

இந்திய இராணுவம்” என்றாலே பலருக்கும் பலவும் நினைவுக்கு வரும். பொதுவாகப் பார்த்தால் இந்திய நடுத்தர வர்க்கத்துக்கு தேசப்பற்று நினைவுக்கு வரும்;  மேட்டுக்குடி / ஐ.டி துறை இளைஞர்களுக்கு சாகசங்கள் நினைவுக்கு வரும்;  வடகிழக்குப் பெண்களுக்கு கற்பழிப்புகள் நினைவுக்கு வந்து ஆத்திரம் தோன்றும்;  காஷ்மீரிகளுக்குக் கொலைகள் நினைவுக்கு வந்து வன்மம் தோன்றும்;  தண்டகாரண்யக் காட்டின் பழங்குடி மக்களுக்கு மண் பறிபோகும் சோகம் நினைவுக்கு வந்து வீரம் பிறக்கும்;  விவசாயம் பொய்த்துப் போன வட மாநிலங்களில் பள்ளி முடித்த இளைஞர்களுக்கு சுட்ட ரொட்டியும் பருப்புக் கூட்டும் வறுத்த கறியும் நினைவுக்கு வந்து ஏக்கம் பிறக்கும்;  மொழி-இன வேறுபாடு இல்லாமல் மொக்கைகளுக்கு மலிவான மிலிட்டரி சரக்கு நினைவுக்கு வந்து எச்சிலூறும்..

பாலஸ்தீன குழந்தைகள் சித்திரவதை!

பாலஸ்தீனிய குழந்தைகளை இரக்கமில்லாமல் கொடுமைப்படுத்தியதாக முன்னாள் இஸ்ரேலிய இராணுவ வீரர்கள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்திருக்கின்றனர். 30 முன்னாள் படைவீரர்களின் வாக்குமூலங்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை இஸ்ரேலிய படைவீரர்கள் செய்த எண்ணற்ற கொடுமைகளை விவரிக்கிறது.
2004-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிரேக்கிங் சைலன்ஸ் (மௌனத்தை கலைக்கிறோம்) என்ற முன்னாள் இஸ்ரேலிய ராணுவ வீரர்களுக்கான அமைப்பின் சார்பில் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை கடந்த சனிக்கிழமை வெளியிடப்பட்டது. இப்போதைய மற்றும் முன்னாள் இஸ்ரேலிய படைவீரர்கள் பங்கேற்ற அல்லது கண்ணுற்ற கொடுமைகளை பற்றி

ஒற்றுமையின் சின்னம் அயோத்தி !

(1992-ல் எழுதப்பட்ட கட்டுரை)
தத்தின் பெயரால் நாட்டைக் குறுக்கு நெடுக்காகப் பிளப்பதற்குத் தனது மதவெறிக் கோடரியைப் பாரதீய ஜனதா இறக்கியிருக்கும் இடம் அயோத்தி. அயோத்தியோ, மதுராவோ, வாரணாசியோ… இடம் எதுவானாலும் நோக்கம் தான் முக்கியம். எனினும் இடத்திற்கு ஒரு முக்கியத்துவம் இருக்கத்தானே செய்கிறது!
1857

ஆயதுல்லாக்களின் சாம்ராச்சியக் கனவு !

(1990-ம் ஆண்டு எழுதப்பட்ட கட்டுரை)
தேசீய முன்னணியின் அடைப்பக்காரர்கள் அதன் சகல திட்டங்களையும் ஆதரித்து ஆயிரம் விளக்கங்கள் கொடுக்கிறார்கள். இவர்கள் – ஆளும் வர்க்க ஊதுகுழல்களான பத்திரிக்கைகள், அறிவுஜீவிகள் – பாப்ரி மஸ்ஜித் பிரச்சனைக்கு முன் வைக்கப்படும் பேச்சு வார்த்தைகளையும் ‘ஆகா’ என்று கொண்டாடுகிறார்கள். பேச்சு வார்த்தைகளோ, கமிஷன்களோ பாப்ரி மஸ்ஜித் பிரச்சனையைத் தீர்த்துவிடுமா? தீர்க்குமென்றே வைத்துக் கொண்டாலும், அதுவே இந்து முஸ்லீம் பிரச்சனைகளைத் தீர்த்துவிடுமா? ஒற்றுமை வந்துவிடுமா?

வங்கதேச முஸ்லிம் அகதிகள் விரட்டப்பட வேண்டியவர்களா?

 
”பாகிஸ்தானைப் பிரித்துக் கொடுத்து விட்டோம். பாகிஸ்தான் ஒரு புதிய தந்திரம் பண்ணியது. பாகிஸ்தான், பங்களாதேஷ் எல்லைப் பகுதிகளில் இருந்த முசுலீம்களைப் பசி, பட்டினி போன்ற காரணங்களைக் காட்டி ‘எங்கள் நாட்டில் வறுமை, பிழைக்க வழியில்லை’ என்று சொல்ல வைத்து பாரதத்திற்குள் ஊடுருவிய அந்த அந்நியர்கள் சுமார் இரண்டரை கோடிப் பேர் பாரதத்தில் உள்ளார்கள்.  ஏற்கெனவே இருக்கிற தலைவலி போதாது என்பது போல் வெளியிலிருந்து இறக்குமதி செய்கின்ற இந்தப் பிரச்சினையை ஒரு முடிவுக்கு கொண்டு வரவேண்டும்.
உலகில் ஒவ்வொரு நாடுமே தங்கள் நாட்டிற்குள் அதிகப்படியாக மற்ற நாட்டின் குடிமக்களை அனுமதிப்பதில்லை. எல்லா நாடுகளும் இப்படி கட்டுப்பாடுகளை விதித்திருக்கும் போது நமது நாடு மட்டும் என்ன சத்திரமா? எவர் வேண்டுமானாலும் வரலாம், என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலை மிகக் கொடுமையானது.”
- இந்துக்களுக்கு உரிமையே கிடையாதா?” – இந்து முன்னணி, வெளியீடு, பக்கம் – 26.
முதலில் பொய்களைக் கவனிப்போம். இரண்டரைக் கோடிப் பேர் அகதிகளாக வந்தார்கள் என்பது எந்தவித ஆதாரமும் அடிப்படையும் இல்லாத வடி கட்டிய பொய். அடுத்து பாகிஸ்தானிலிருந்து அகதிகள் வருகிறார்கள் என்பதும் முழுப் பொய்தான். காசுமீர் பிரச்சினை தீவிரமடைவதற்கு முன்பேயே, பாகிஸ்தானுடன் நடந்த மூன்று போர்களையொட்டி எல்லையைக் கடுமையாகக் கவனித்து வருகிறது இந்திய அரசு. சாதாரண வாழ்க்கைத் தேவைகளுக்காக எல்லை மாறும் இருநாட்டு எல்லையோர கிராம மக்கள் பலர் இந்திய மற்றும் பாகிஸ்தான் இராணுவத்தால் கொல்லப்பட்டிருக்கின்றனர். இதனால் பல கிராமங்கள் வருடத்தில் பாதி நாட்கள் காலியாகத்தான் இருக்கின்றன.
எனில் இந்தியாவில் அகதிகள் என்ற நிலையில் இருப்பவர்கள் யார்?
இங்கே அரசின் சட்டபூர்வ பாதுகாப்பைப் பெற்ற அகதிகளும், பெறமுடியாத பரிதாபமான அகதிகளும் இருக்கின்றனர். இந்திய அரசின் பிராந்திய வல்லரசு என்ற நலனக்கேற்ப அகதிகளைக் கவனிக்கும் முறை வேறுபடுகிறது.
வங்க தேசத்தில் புத்த மதத்தைச் சேர்ந்த ‘சக்மா’ எனும் பழங்குடியினர் இருக்கின்றனர். இவர்களது நிலத்தையும், வாழ்வையும் பறித்துக்கொண்ட வங்கதேச அரசு இராணுவத்தின் மூலம் தொடர்ந்து அடக்கியும் வருகிறது. அதனால் வேறு வழியின்றி மேற்கு வங்கத்திற்கும், அஸ்ஸாமிற்கும் சில ஆயிரம் பேர் அகதிகளாக வந்தனர். இவர்கள் மூலம் அரசியல் ஆதாயம் ஏதும் இல்லையென்பதால், கணிசமான சக்மா பழங்குடியினரை மீண்டும் வங்க தேசத்திற்கே விரட்டி வருகிறது இந்திய அரசு.
சீனாவின் தென்மேற்கில் அமைந்திருக்கும் திபெத் பீடபூமியில், கடந்த சில நூற்றாண்டுகளாக லாமா எனப்படும் பௌத்தத் ‘துறவி’ நிலப்பிரபுக்கள் பெரும்பான்மை திபெத்தியர்களை ஒடுக்கி வந்தனர். 1949-இல் முடிவடைந்த சீனப் புரட்சி, இந்தக் கொடுங்கோன்மையான, பௌத்த நிலப்பிரபுக்களின் ஆட்சியையும் முடிவுக்குக் கொண்டு வந்தது. அதிகாரத்தை இழந்த லாமாக்கள் தலாய்லாமா தலைமையில் 60-களில் இந்தியாவிற்கு ஓடி வந்தனர். இமாச்சல பிரதேசத்தின் தர்மஸ்தலாவிலும், ஏனைய வடஇந்திய நகரங்களிலும் பரவிக்கிடக்கும் சில ஆயிரம் திபெத்தியர்களை இந்திய அரசு தொடர்ந்து சீராட்டி வருகிறது. தலாய்லாமா கும்பலைத் தனி அரசாக அங்கீகரித்ததோடு அவர்களையம் உலக அரங்கில் ‘சுதந்திர திபெத் நாடு’ என்று பிரச்சாரம் செய்வதற்கு அனுமதியும் ஆதரவும் அளித்து வருகிறது. இந்திய அரசின் அமெரிக்க ஆதரவு – சீன எதிர்ப்புக் கொள்கையின் காரணமாக இந்த ‘திபெத் அகதிகள்’ நட்சத்திர அந்தஸ்துடன் வாழ்கின்றனர்.
காலனிய ஆட்சிக்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பேயே பாரசீகத்தைச் (ஈரான், ஈராக்) சேர்ந்த பார்ஸிகள் மேற்கு இந்தியாவிற்கு வந்தனர். குஜராத்திலும், பம்பாயிலும் வாழும் இப் பார்ஸிகளும், இவர்களது தரகு முதலாளிகளும் இந்து மத வெறியர்களுக்கு ஆதரவான சமூகப் பிரிவாகவே இருக்கின்றனர். எனவேதான் வெளிநாட்டுப் பின்னணியும், வேற்று மதச் சடங்குகளும் கொண்ட பார்ஸிகளை இந்து மதவெறியர்கள் முசுலீம்களைப் போல் எதிர்ப்புணர்ச்சி கொண்டு நடத்துவதில்லை.
தமது தாயகத்திலிருந்து துரத்தப்பட்ட யூதர்கள் உலகெங்கும் சிதறியபோது ஒரு சிலர் இந்தியாவிற்கும் வந்தனர். இஸ்ரேல் உருவான பிறகு பெரும்பான்மை யூதர்கள் அங்கே சென்றுவிட்டாலும் சிறு எண்ணிக்கையிலான யூதர்கள் இங்கே இருக்கின்றனர். அமெரிக்க ஆதரவு, முசுலீம் எதிர்ப்புக் கொள்கையிலிருக்கும் இஸ்ரேலிய அரசு இந்து மதவெறியர்களுக்கும், இந்திய அரசுக்கும் நெருக்கமாக இருப்பதால், இந்திய யூதர்களும் பிரச்சினையின்றி நலமுடன் வாழ்ந்து வருகின்றனர்.
இமயத்தின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் நேபாளம் இந்தியாவின் பிராந்தியத் துணை வல்லரசு ஆதிக்கத்திற்கு அடங்கி வாழ்ந்துவரும் நாடாகும். தமது வாழ்க்கைத் தேவைகளுக்காக இந்தியாவுடன் பிணைக்கப்பட்டிருக்கும் நேபாள மக்களை இந்திய அரசு தனது தேவைகளுக்கேற்பப் பயன்படுத்திச் சுரண்டி வருகிறது. அதனாலேயே இந்தியாவிலிருக்கும் நேபாள மக்களைக் கண்டும் காணாமலும் நடத்தி வருகிறது. இந்திய இராணுவத்தின் தீவிரப் போரிடும் பிரிவான ‘கூர்க்கா ரெஜிமண்ட்’டில் பல ஆயிரம் நேபாள வீரர்கள் இருக்கின்றனர். பம்பாய் விபச்சாரத்திற்கு ஆயிரக்கணக்கான நேபாளச் சிறுமிகள் ஆண்டுதோறும் விற்கப்படுகின்றனர். இந்திய ஆளும் வர்க்கங்களின் ஆசியுடன் இந்திய மாஃபியா கும்பல்கள் நேபாளத்தை மையமாக வைத்து போதைப் பொருள் வியாபாரத்தையும் வளமாகச் செய்து வருகின்றனர். இப்படி இராணுவத்தில் குறைந்த கூலி கொடுத்துப் பலியிடவும், பம்பாய் விபச்சாரத்தில் பணத்தை அள்ளவும் பயன்படும் நேபாள  மக்களை, இந்த மதவெறியர்கள் அகதிகளாகக் கருதாமல் இருப்பதன் மர்மம் இதுதான்.
சோவியத் ஆதரவுடன் ஆப்கானில் ஆட்சி நடத்திய நஜிபுல்லா அரசு, இந்திய அரசாலும் ஆதரிக்கப்பட்டது. இது பாக். எதிர்ப்பு மற்றும் சோவியத் ஆதரவு கொண்டிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கைக்கேற்ப தீர்மானிக்கப்பட்டதாகும். பின்னர் அமெரிக்க – பாக். ஆதரவு முஜாஹிதீன்களும்,  தாலிபான்களும் நஜிபுல்லா அரசை வீழ்த்தினர். அப்போது இந்தியாவிற்கு ஓடிவந்த ஆயிரக்கணக்கான நஜிபுல்லா ஆதரவு ஆப்கானியர்களை இந்திய அரசு வரவேற்று இன்று வரை பராமரித்து வருகிறது. இவர்களும் முசுலீம்கள்தான் என்றாலும் ஆர்.எஸ்.எஸ்.கும்பல் வாய் திறவாமல் இருக்கக் காரணம் பாகிஸ்தான் எதிர்ப்பு அரசியல்.
அடுத்து நமக்கு நெருக்கமான ஈழ அகதிகள் பிரச்சினையைப் பார்ப்போம். ஈழத்திலிருந்து வெளியேறி உலகமெங்கும் சிதறிக் கிடக்கும் அகதிகளில் சரிபாதிப் பேர், பல்லாயிரக்கணக்கானோர், இந்தியாவில் – தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றனர். நேபாளத்தைப் போல இலங்கையும் இந்தியாவுடன் பல்வேறு உறவுகளில் பிணைக்கப்பட்டிருக்கும் நாடுதான். இந்திய பிராந்தியத் துணை வல்லரசுக் கொள்கையின் முக்கியமான அங்கமாக இலங்கை இருப்பதும், ஈழவிடுதலைப் போராட்டம் காரணமாக, அக்கொள்கை இன்னும் முக்கியத்துவம் பெறுவதும் நாம் அறிந்ததே. 1983 ஜுலை படுகொலைக்குப் பிறகு தமிழகம் வந்த ஈழ அகதிகள் ஆரவாரத்துடன் மைய அரசினால் வரவேற்கப்பட்டனர். ஈழப் போராளிக் குழுக்களுக்கு ஆயுதமும், பணமும், பயிற்சியும் தடையின்றித் தரப்பட்டன. காரணம், இலங்கையில் தன் தலையீட்டையும், ஆதிக்கத்தையும் ஏற்படுத்துவதற்கும், உறுதி செய்வதற்கும், இந்திய அரசு அகதிகளையும், போராளிகளையும வரவேற்று உபசரித்தது.
இன்றோ தமிழகத்தின் ஈழ அகதிகள் முகாம்கள் அனைத்தும் சிறைக் கூடங்களாக மாற்றப்பட்டுவிட்டன. சிங்கள அரசால் ஈழத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள் கூட இங்கே  அகதிகளுக்குக் கிடையாது என்பதே உண்மை. முன்பு ஈழ அகதிகளுக்கு கலங்கரை விளக்காகத் திகழ்ந்த இராமேசுவரம், இன்று மரணப் பள்ளத்தாக்காக மாறிவிட்டது. தலைமன்னாரிலிருந்து புறப்பட்டு பாதி வழியில் கடலில் மூழ்கடித்துக் கொல்லப்பட்டும், மீறி வந்தால் ஐந்தாம் மணற்திட்டில் இறங்கி பசி – வெயில் – குளிரில் பரிதவித்தும் வாடுவதே அவர்களின் தலைவிதியாகிவிட்டது. பத்தாண்டுகளுக்குள் நடந்த இந்தத் தலைகீழ் மாற்றம், அகதிகள் பிரச்சினையில் அரசியல் நலனுக்கேற்ப இந்திய அரசு போடும் இரட்டை வேடத்தைப் பளிச்செனப் புரிய வைக்கும். அவ்வகையில் இந்து மதவெறியர்களும் ஈழ அகதிகளை ஒடுக்குவதையே விரும்புகின்றனர்.
இனி ஆர்.எஸ். கும்பல் விரட்டத் துடிக்கும் வங்கதேச அகதிகளைப் பார்க்கலாம். 80-களில் ஈழத்தமிழ் அகதிகளுக்கு என்ன நேர்ந்ததோ அதுதான் 70-களில் வங்கதேச அகதிகளுக்கும் நடந்தது. பாகிஸ்தானைப் பிளப்பதற்குத் தருணம் பார்த்திருந்த இந்திய அரசுக்கு வங்கதேசம் ஒரு கருவியாக வாய்த்தது. இந்திரா காலத்தில் பாகிஸ்தானுடன் இதற்காக நடந்த 1971 போரின்போது வங்கதேசத்திலிருந்து வந்த அகதிகள் வரவேற்கப்பட்டார்கள். பாகிஸ்தானை எதிர்த்த வங்கதேசத்து சேக் முஜிபுர் ரஹ்மான் இந்தியாவால் வளர்க்கப்பட்டார். அவரது ‘முக்தி வாஹனி’ இயக்கத்திற்கு ஆயுதமும், பயிற்சியும் இந்திய அரசால் அளிக்கப்பட்டன. போரில் பாகிஸ்தான் தோல்வியடைந்து, வங்கதேசம் பிரிந்தபோது அகதிகளின் வாழ்வும் முடிவுக்கு வந்தது.
சேக் முஜிபூர் ரஹ்மானுக்குப் பிறகு வந்த இராணுவ மற்றும் ஜனநாயக ஆட்சியாளர்கள் இந்திய ஆதிக்கத்தை எதிர்த்து வருவதால், இங்கிருக்கும் வங்கதேச ஏழைகளை விரட்டுவதற்கு இந்திய அரசும், இந்து மதவெறியர்களும் தீவிரம் காட்டுகின்றனர். இன்றைய வங்கதேசமும் (பங்களாதேஷ்) இங்கிருக்கும் மேற்கு வங்க மாநிலமும், மொழியால், இனத்தால், பண்பாட்டால் ஒரே மக்கள் வாழும் பிராந்தியமாகும். மேற்கு வங்கத்தில் இந்துக்களும், கிழக்கு வங்கத்தில் முசுலீம்களும் பெரும்பான்மையாக இருந்தாலும், இரு மதத்தைச் சேர்ந்தோரும் கணிசமான அளவில் இரு பகுதிகளிலும் வாழ்கின்றனர். வங்கதேசிய இனம் இந்தியாவின் வளர்ச்சியடைந்த ஒருசில தேசிய இனங்களில் ஒன்றாகும். அதனால் இம்மக்களது நெருக்கமான உறவு பற்றி அதிகம் விளக்காமலேயே புரிந்து கொள்ள முடியும்.
காலனிய ஆட்சியின்போது 1905-இல் கர்சன் பிரபு என்ற ஆங்கிலேய வைசிராய் வங்கத்தை மேற்கு, கிழக்கு என மதத்தை அடிப்படையாக வைத்துப் பிரித்தான். ஆயினும் வெள்ளையர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியை அன்றைய வங்கத்து மக்கள் தீரத்துடன் போரிட்டு முறியடித்தார்கள். மதவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டு வங்காளிகள் என்ற முறையில் அவர்களால் நடத்தப்பட்ட இப்போராட்டம் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒரு வரலாற்று நிகழ்வாகும். ஆயினும் அதன்பிறகு நாட்டு விடுதலைப் போராட்டம் இந்து மதச்சார்பை எடுத்ததும் அதை வெள்ளையர்கள் ஆதரித்ததும், எதிர் விளைவாக முசுலீம் லீக் தோற்றமும் இறுதியில் வங்கம் மதத்தால் பிளவுண்டு போகக் காரணமாய் அமைந்தன.
கிழக்கு பாகிஸ்தான் என்றழைக்கப்பட்ட வங்கதேசம், பாகிஸ்தானின் ஒடுக்கு முறையிலிருந்து பிரிந்து வந்தாலும், வறுமையிலிருந்து விடுதலையடையவில்லை. இந்தியாவைவிடப் பின்தங்கியிருக்கும் வங்கதேசம் எவ்விதப் பொருளாதார முன்னேற்றமும் இல்லாத ஒரு வறிய நாடாகும். ஏற்கனவே துணைக் கண்டத்துடன் நெருக்கமான உறவு கொண்டிருந்த வங்கத்து மக்களில் ஆகக் கடையரான ஏழைகள் பஞ்சம் பிழைக்க கல்கத்தா, டெல்லி, பம்பாய் நகரங்களுக்கு வருகின்றனர். இப்படி இந்தியாவின் வறிய பகுதிகளிலிலிருந்து பிழைப்புத் தேடி பெரு நகரங்களுக்குக் குடிபெயர்வது என்பது இந்நூற்றாண்டு முழுவதும் நடைபெறும் நிகழ்ச்சியாகும். வங்க தேசத்திலிருந்து இந்தியா வந்து ரூ.20, ரூ.30 என கூலிக்கு  வேலை செய்யும் இந்த ஏழைகளை முசுலீம்கள் என்ற ஒரே காரணத்தினால், விரட்டி அடிக்க வேண்டும் என்று இந்து மத வெறியர்கள் கூப்பாடு போடுகின்றனர்.
அகதிகள் பிரச்சினை என்பது ஆர்.எஸ்.எஸ். கூறுவது போல உலக அதிசயமல்ல. காலனிய நாடுகளை அடக்கி ஆளும் ஏதாதிபத்தியம் தோன்றியதிலிருந்து, நாடுவிட்டு நாடு போகும் அகதிகள் பிரச்சினையும் துவங்கிவிட்டது. அரசியல், பொருளாதார, மத, பண்பாட்டுக் காரணங்களினால் தன் நாட்டில் வாழ வழியின்றி அடைக்கலம் தேடி ஓடுவது என்பது இன்றைய உலகமாயக்கத்தின் வளர்ந்து வரும் பிரச்சினையாகும். இதற்குக் காரணமான வல்லரசு நாடுகளே இதற்குத் தீர்வு சொல்ல முடியாத நெருக்கடியில் சிக்கியிருக்கின்றனர்.
இந்தியாவிலிருந்து மலேசியா-சிங்கப்பூருக்கும், வளைகுடாவிற்கும் விசா இல்லாமல் போவது, மத்திய – தென் அமெரிக்கா நாடுகளிலிருந்து, அமெரிக்க -  ஐக்கிய நாட்டிற்குப் (யு.எஸ்.) போவது, மத்திய தரைக்கடல் – ஆப்பிரிக்க ஏழை நாடுகளிலிருந்து ஐரோப்பாவிற்குப் போவது, தெற்காசிய நாடுகளிலிருந்து ஆஸ்திரேலியாவிற்குச் செல்வது, தென்கிழக்கு ஆசிய நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்குச் செல்வது என வேலை – வாழ்க்கை தேடி ஓடும் ‘சட்ட விரோத அகதிகளின்’ இடமாற்றம் உலகெங்கும் நடந்து வருவதுதான்.
இன்னும் போஸ்னியா, குர்திஸ்தான், செசன்யா, கிழக்கு திமோர், ஆப்கான், ஈழம், காசுமீர் போன்ற அரசியல் அகதிகள் பிரச்சினையும் உலகெங்கும் உள்ளதுதான். இப்படி நாடு விட்டு நாடு போகும் இத்தகைய அகதிகளை அந்தந்த நாட்டு முதலாளிகள் குறைந்த கூலி கொடுத்து சக்கையாய்ப் பிழிந்து சுரண்டியும் வருகின்றனர். இத்தகைய மலிவான உழைப்புச் சுரண்டலுக்காக பல நாடுகள் சட்டவிரோதக் குடியேற்றத்தைக் கண்டும் காணாமல் அனுமதிக்கின்றனர்.
அதேசயம் இந்த அகதிகள் அரசியல் ரீதியாக ஒன்று சேர்வதைத் தடுத்து மிரட்டுவதற்காக உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு அகதிகளைக் காரணம் காட்டி அந்நாட்டு இளைஞர்களை உசுப்பி விடுவது என்ற தந்திரத்தை இந்நாட்டு அரசுகள் பின்பற்றி வருகின்றன. பிரிட்டனில் ஆசிய நாட்டவரைத் தாக்குவது – அல்ஜீரியர்களை பிரான்சில் தாக்குவது, தென் அமெரிக்கர்களை மிரட்டுவது, ஈழ அகதிகளை ஜெர்மனியில் அடிப்பது, ஆஸ்திரேலியாவில் தெற்காசியைரைத் தாக்குவது, இவை சில எடுத்துக்காட்டுக்கள். இந்நிகழ்ச்சிப் போக்கிலிருந்தே உலகெங்கும் பாசிச இனவெறிக் குழுக்கள் தோன்றியுள்ளன. உலகளாவிய இந்த பாசிசக் கூட்டணியின் இந்தியப் பிரதிநிதிகளான ஆர்.எஸ்.எஸ்.கூட்டம் வங்கதேச அகதிகளை அடித்து  விரட்டுகிறது.
எனவே அகதிகளுக்காகக் கண்ணீர் விடுவதும், அவர்கள் உழைப்பைச் சுரண்டுவதும், அவர்களை அடித்து விரட்டுவதும் , ஏகாதிபத்தியத்தின் இரட்டை முகங்ககளாகும். ஐ.நா.சபையின் மனித உரிமை சாசனம் வகுத்திருக்கும் அகதிகளின் உரிமைகள் உண்மையில் ஒரு கேலிக்கூத்தாக மாறிவிட்டன. வல்லரசு நாடுகளின் அரசியல் ஆதாயத்துக்காகப் பந்தாடப்படும் அகதிகளின் அவலம இக்கணம்வரை அதிகரித்தே வருகிறது. இந்தியாவிலும் அப்படித்தான்.
அமெரிக்க – ஐரோப்பிய, ஜப்பான் நாடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் இந்தியாவைக் கூறுபோடடு விற்கும் பா.ஜ.க., இந்து மத வெறிக் கும்பல், ரிக்ஷா இழுத்தும் மூட்டை தூக்கியும் தெருவில் வாழும் வங்கதேசத்து ஏழைகளை தேச விரோதிகள் என்று கூசாமல் கூறுகிறது. முசுலீம் மக்களை ஐ.எஸ்.ஐ ஏஜெண்டு – அகதி என்று மிரட்டுவதற்கான துருப்புச் சீட்டுதான் இந்த அகதி பிரச்சாரம்.

பாக் – வங்கதேச சிறுபான்மை இந்துக்கள் அடிமைகளா?

”பாரதத்தில் முசுலீம்களுக்கு அனைத்துச் சலுகைகளும், உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால், பாகிஸ்தானிலும், பங்களாதேஷிலும் வசிக்கின்ற சிறுபான்மை இந்துக்களுக்கு எவ்வித உரிமையும் இல்லை. இரண்டாந்தரக் குடிமக்களாக நடத்தப்படுகின்றனர். இந்துக்கள் தாக்கப்படுகின்றனர்; இந்துக் கோவில்களும் இடிக்கப்படுகின்றன.”
இந்து மதவெறியரின் பிரபல அவதூறுகளில் ஒன்று.
இந்தியாவில் முசுலீம்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்படும் உரிமைகள், சலுகைகள் என்பவை ஏதோ பாகிஸ்தானிலிருந்து வந்த அகதிகளுக்கு வழங்கப்பட்டவை போல ஆர்.எஸ்.எஸ். சித்தரிக்கிறது. முசுலீம் என்றாலே பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள்தான் என்ற உண்மைக்குப் புறம்பான அயோக்கியத்தனமான பிரச்சாரத்தை முதலில் முறியடிக்க வேண்டும்.

வரலாற்றுப் பெயர்களை மாற்றியது யார்?

”நமது நாட்டில் உள்ள நகரங்களுக்கும் சாலைகளுக்கும் சிறப்பான வரலாற்று இடங்களுக்கும் முகலாய ஆட்சிக் காலத்திலும், கிறித்தவ ஆங்கிலேய ஆட்சிக்காலத்திலும் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. தற்போது நாட்டிற்குச் சுதந்திரம் கிடைத்த பிறகு சென்னை என்ற பெயரைப் பெருமிதமாக நினைக்கிறோமே, அதுபோல பிரிஞ்சி முனிவர் தவம் செய்த இடம் ஆகையால் பறங்கிமலை என்பதை மாற்றி ‘பிரிஞ்சி மலை’ என்று அறிவிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். அவர்கள் அதற்கு ஏற்பாடு செய்து மக்களின் கருத்திற்கு மதிப்பளித்தார்.

திப்பு சுல்தான் – விடுதலைப் போரின் விடிவெள்ளி !

திப்பு சுல்தான்
திப்பு சுல்தான்
கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்‘, திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. “இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?” என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு. தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன்,

ஹைதர் அலி – மன்னர் குலம் சாராத மாவீரன் !

ஹைதர் அலி
ஹைதர் அலி - பிரெஞ்சு ஓவியம்
“ஆங்கிலேயர்களை நாம் பல முறை தோற்கடித்து விட்டோம். ஆனால், ஒரு இடத்தில் தோற்கடிப்பதன் மூலம் அவர்களை நாம் வீழ்த்த முடியாது…… காந்தகார் மற்றும் பாரசீகத்தின் மன்னர்களை வங்காளத்தின் மீதும், மராத்தாக்களை பம்பாயின் மீதும் படையெடுக்கச் செய்யவேண்டும். பிரெஞ்சுக்காரர்களையும் இணைத்துக் கொண்டு நாம் அனைவரும் மேற்கொள்ளும் கூட்டான நடவடிக்கை மூலம் ஆங்கிலேயர்கள் மீது ஒரே நேரத்தில் எல்லா முனைகளிலும் போர் தொடுக்க வேண்டும்….”

சிரியா : அடுத்த இராக் ?

சிறுவர்கள் பிணங்களாகசிரியா மீது ஒரு அநீதியான, ஆக்கிரமிப்புப் போரைத் தொடுப்பதற்கான தயாரிப்புகளை அமெரிக்காவும் மேற்குலக ஏகாதிபத்திய நாடுகளும் முடுக்கி விட்டுள்ளன.  “இராக் மீது நடத்தப்பட்டதைப் போன்று இல்லாமல், இது ஒரு சிறிய தாக்குதலாக இருக்கும்” என அமெரிக்க அதிபர்

அஸ்கர் அலி எஞ்சினியர் : இந்து – முஸ்லீம் மதவெறியை எதிர்த்து நின்ற மாமனிதர் !

 

தீவிர மதவெறி எதிர்ப்பு செயல் வீரரும், ஆய்வாளரும், உறுதிமிக்க இசுலாமிய சீர்திருத்தவாதியுமான அஸ்கர் அலி எஞ்சினியர் மே 14, 2013 அன்று தனது 73-வது வயதில் இயற்கை எய்தினார்.

வல்லரசு இந்தியாவில் கையால் மலம் அள்ளும் வேலை



கையால் மலத்தை அள்ளிக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்யும் இழிதொழிலை ஒழித்துக்கட்டக் கோரும் போராட்டங்கள் கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் நிலையில், மைய அரசு தூக்கத்திலிருந்து திடீரென விழித்துக் கொண்டதைப் போல, கடந்த செப்டம்பர் மாதத்தில் இதற்காகப் புதிய சட்டமொன்றை – கையால் மலம் அள்ளும் தொழிலாளர்களைப் பணிக்கு அமர்த்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களது மறுவாழ்வுக்கான சட்டம் – நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஒருமனதாக நிறைவேற்றியிருக்கிறது. ஐ.டி. கம்பெனிகள்,

இலங்கை இசுலாமியர்களை குறிவைக்கும் பௌத்த மதவெறி !

லங்கை தலைநகர் கொழும்புவின் கிராண்ட் பாஸ் பகுதியில் உள்ள மஸ்ஜித் தீன்-உல் இஸ்லாம் என்ற மசூதியை புத்த மத வெறியர்கள் தாக்கி சேதப்படுத்தினர். கடந்த சனிக் கிழமை மாலை தொழுகை நடந்து கொண்டிருந்த போது, அருகில் இருந்த புத்த விகாரையில் மணி அடித்து ஆட்களை திரட்டி, மசூதியின் மீது தாக்குதலை நடத்தியிருக்கின்றனர்.
மசூதி
இஸ்லாமிய, கிருத்தவ இலக்குகள் மீது கடுங்கோட்பாட்டு வாத புத்த மத அமைப்புகள் தாக்குதல் நடத்துகின்றன. (படம் : நன்றி பிபிசி)

Sunday, January 19, 2014

சச்சார் அறிக்கை முஸ்லிம்கள் என்ன செய்ய வேண்டும்?



வேடிக்கையான ஒரு முல்லா கதை இருக்கிறது।சமூகத்தில், முல்லா என்றாலே வேடிக்கை என்றாகிப்போனது ஏன்? என்ற கேள்வி அவ்வப்போது எனக்குள் எழுவதுண்டு। அப்படியெல்லாம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தால் சில அருமையான விசயங்களை ரசிக்கம முடியாமல் போய்விடும் என்பதால் அதைப்பற்றி அதிகம் யோசிப்பதில்லை।உங்களுக்கும் அப்படி ஒரு கேள்வி எழுந்தால்