Monday, February 24, 2014

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் உலக மீடியக்களுக்கு மரண அடி கொடுக்கும் சவுதி அரசின் தீவிர வாத தடுப்பு சட்டம்

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும்
உலக மீடியக்களுக்கு மரண அடி கொடுக்கும்
சவுதி அரசின் தீவிர வாத தடுப்பு சட்டம்
********************************************

சில தினங்களுக்கு முன்பு சவுதி மன்னர் அப்துல்லா புதிய தீவிர வாத தடுப்பு சட்டம் என்ற பெயரில் ஒரு உத்தரவை வெளியிட்டிருந்தார்

அந்த சவுதி அரசின் அதிகாரபுர்வ உத்தரவு அரபு நாளிதழ்களில் தெளிவாக வெளியிட பட்டிருந்தாலும் ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளில் முழுமையாக இருட்ட்டிப்பு செய்ய பட்டு விட்டதாகவே நாம் கருதுகிறோம்

தீவிர வாத த்தோடு இஸ்லாத்தை தொடர்ப்பு படுத்த குடியவர்களுக்கு மரண அடி தரும் விதத்தில் அந்த உத்தரவு அமைந்திருந்த தால் தான் மீடியாக்கள் அனைத்தும் அதை இருட்டடிப்பு செய்துவிட்டன

சவுதியை சார்ந்தவர்கள் சவுதிக்கு உள்ளேயோ வெளியேயோ தீவிர வாத செயல்களிலோ தீவிரவாத த்தை வளர்ப்பதர்காக பிரச்சாரத்திலோ இறங்கினால் அவர்கள் செய்யும் செயலின் தன்மைக்கு ஏர்ப்ப மூன்று ஆண்டு முதல் இருபது ஆண்டு வரை சிறை சிறை தண்டனை வழங்குவதர்கு அந்த சட்டம் வழி செய்கிறது

அரபியல் வந்திருக்கும் உத்தரவை அப்படியே தமிழில் தருகிறேன்

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பு உடையோனும் ஆகிய இறைவனின் திரு பெயரால்

அரசு ஆணை எண் 44/1

நாள்:3ஃ4ஃ1435 ஹிஜ்ரா

வெளியிடுபவர் சவுதி மன்னர் அப்துல்லா

இஸ்லாமிய மார்க்க நெறியை பேணி முஸ்லிம் சமூகத்தில் அமைதியையும் அன்பையும் ஒற்றுமையையும் நிலை நாட்டுவதர்க்காகவும் சமூக பிளவுகளில் இருந்தும் பிரச்சனைகளில் இருந்தும் இந்த சமூகத்தை பாது காப்பதர்க்காகவும் பின்வரும் இறைவசனங்களை யும் நபி மொழியையும் அடிப்படையாக கொண்டு பின் வரும் உத்தரவை வெயியிடுகிறோம்

"واعتصموا بحبل الله جميعاً ولا تفرقوا"

அல்லாஹவின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பற்றி பிடித்து கொள்ளுங்கள் பிரிந்து விடாதீர்கள்
அத்தியாயம் 3
வசனம் 103

"وأن هذا صراطي مستقيمًا فاتبعوه ولا تتبعوا السبل فتفرَّق بكم عن سبيله"

இதுவே எனது நேரான வழி எனவே இதனையே பின்பற்றுங்கள் பல வழிகளை பின்பற்றாதீர்கள் அவை அவனது வழியை விட்டும் உங்களை பிரித்து விடும்
அத்தியாயம் 6
வசனம் 153

"من فارق الجماعة شبرًا فارق الإسلام ".

أ أحمد والترمذي والحاكم

இஸ்லாமிய கூட்டமைப்பிலிருந்து ஒருசாண்விலகியவன் இஸ்லாத்தை விட்டே விலகியவன் ஆவான்
நபிகள் நாயகம்
ஆதாரம் ஹாகிம் “ திர்மிதி“ அஹ்மத்”

இந்த மார்க்க ஆதரங்களையும் இந்த ஆதாரங்களின் அடிப்படையில் இதர்கு முன்பு சவுதியை ஆண்ட மன்னர்கள் பிரப்பித்த உத்தரவுகளையும் அடிப்படையாக கொண்டு பின் வரும் முடிவுகளை அறிவிக்கிறோம்

பின் வரும் செயல்களில் சவுதி குடிமகன் ஈடுபட்டால் குறைந்த பட்ச்சம் மூன்று ஆண்டுகளில் இருந்து அதிகபட்ச்சம் இருபது ஆண்டுகள் வரைச சிறை தண்டனை வழங்கபடும்

1.நாட்டிர்கு உள்ளேயோ வெளியேயோ தீவிரவாத தாக்குதல்களை நடத்து வது

2.தீவிர வாத த்தை வளர்ப்பதர்காக ஆள் சேர்ப்பது பிரச்சாரம் செய்வது

இந்த இரண்டு செயல்களும் மார்க்க சட்டபடியும் நாட்டின் சட்டபடியும் கடுமையான குற்றமாகும்


0 comments:

Post a Comment