Monday, March 17, 2014

வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட தயார் ...கெஜ்ரிவால்

பெங்களூர்,
வாரணாசி தொகுதியில் நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட தயார் என்று ஆம் ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.
தேர்தல் பிரசாரம்
பாராளுமன்ற தேர்தலையொட்டி, 2 நாள் தேர்தல் பிரசார பயணமாக ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் கர்நாடகத்துக்கு வந்தார்.
அன்று அவர் பெங்களூரில் திறந்த ஜீப்பில் சென்றபடி, ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்தார். 2–வது நாளான நேற்று பெங்களூர் மற்றும் சிக்பள்ளாபூரில் ஓட்டு சேகரித்தார்.
பெங்களூரில் தேர்தல் பிரசாரத்தின்போது அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:–
போட்டியிட தயார்
உத்தரபிரதேச மாநிலம் வாரணாசி தொகுதியில் பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து நான் களம் இறங்க வேண்டும் என்று எனது கட்சி விரும்புகிறது. மோடியை தோற்கடிக்க வேண்டும். அந்த சவாலை எதிர்கொள்ள நானும் தயாராக உள்ளேன்.
வருகிற 23–ந்தேதி வாரணாசி தொகுதியில் தேர்தல் பிரசாரம் செய்கிறேன். அப்போது பொதுமக்களிடம் நான் தேர்தலில் போட்டியிட வேண்டுமா? என்று கருத்து கேட்பேன். அவர்கள் என்ன தெரிவிக்கிறார்களோ அதன் அடிப்படையில் முடிவு எடுப்பேன். ஒருவேளை நான் போட்டியிட வேண்டும் என்று வாரணாசி மக்கள் விரும்பினால், அதை நான் முழுமனதோடு ஏற்றுக் கொள்வேன்.
இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.

0 comments:

Post a Comment