பக்ராம் கைதிகளுக்கு கடும் சித்திரவதை: ஆப்கான் கமிஷன்
ஆப்கானிஸ்தானில் பக்ராம் விமானதளத்தை ஒருமாதத்திற்குள் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என அதிபர் கர்ஸாய் அமெரிக்காவிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அரசால் நியமிக்கப்பட்ட குல்ரஹ்மான் தலைமையிலான விசாரணை கமிஷன் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் பக்ராம் சிறைக் கைதிகளிடம் இருந்து வாக்குமூலம் சேகரித்ததன் மூலம் அவர்களுக்கு நேர்ந்த கொடுமைகள் கமிஷனுக்கு தெரியவந்துள்ளது.
இதில், கைதிகள் கடுமையாக சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், எவ்வித ஆதாரமும் இல்லாமல் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரியவந்துள்ளது.
. கமிஷனின் விசாரணையில் வெளியான சித்திரவதைக் கொடுமைகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என காபூலில் அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.
3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அமெரிக்க ஆக்கிரமிப்பு ராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மிகப்பெரிய சிறையான பக்ராமில் அடைக்கப்பட்டுள்ளனர்
0 comments:
Post a Comment