Monday, April 21, 2014

சவூதி அரசின் தீவிரவாத தடுப்பு சட்டம்....!!


முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க முயலும் உலக மீடியக்களுக்கு மரண அடி கொடுக்கும் வகையில் சவூதி அரசின் தீவிரவாத தடுப்பு சட்டம்....!!

உலகமே உற்று நோக்கும் சாம்ராஜ்ஜியத்தின் மன்னரான சவூதி அரேபிய மன்னர் அப்துல்லாஹ் புதிய தீவிரவாத தடுப்பு சட்டம் ஒன்றை இயற்றி உத்தரவு பிறப்பித்துள்ளார்.



சவூதி அரேபிய அரசின் அதிகாரப்பூர்வமான இந்த உத்தரவு அரபுலக நாளிதழ்களில் தெளிவாக வெளியிடப்பட்டிருந்தாலும் ஆங்கிலம் மற்றும் இதர மொழிகளில் முழுமையாக இருட்டடிப்பு செய்யபட்டு விட்டதாகவே நாம் கருதுகிறோம்.

தீவிரவாதத்தோடு இஸ்லாத்தை தொடர்புப்படுத்தும் மீடியாக்களுக்கு மரண அடி தரும் விதத்தில் இந்த உத்தரவு அமைந்திருந்ததால் தான் மீடியாக்கள் அனைத்தும் அதை இருட்டடிப்பு

செய்துவிட்டன.

சவூதியை சார்ந்தவர்கள் சவூதிக்கு உள்ளேயோ வெளியேயோ தீவிரவாத செயல்களிலோ, தீவிரவாதத்தை வளர்ப்பதற்காக பிரச்சாரத்திலோ இறங்கினால் அவர்கள் செய்யும் செயலின் தன்மைக்கு ஏற்ப மூன்று ஆண்டு முதல் இருபது ஆண்டு வரை சிறைத்தண்டனை வழங்குவதற்கு அந்த சட்டம் வழி செய்கிறது.

அரபியல் வந்திருக்கும் உத்தரவை அப்படியே தமிழில் தருகிறேன்....

அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்பு உடையோனும் ஆகிய இறைவனின் திருப்பெயரால்...

அரசு ஆணை எண் 44/1

நாள் : 3.4.1435 ஹிஜ்ரா

வெளியீடு : சவூதி மன்னர் அப்துல்லாஹ்

இஸ்லாமிய மார்க்க நெறியை பேணி முஸ்லிம் சமூகத்தில் அமைதியையும் அன்பையும் ஒற்றுமையையும் நிலை நாட்டுவதற்காகவும் சமூக பிளவுகளில் இருந்தும் பிரச்சனைகளில் இருந்தும் இந்த சமூகத்தை பாதுகாப்பதற்காகவும் பின்வரும் இறைவசனங்களையும் நபி மொழியையும் அடிப்படையாக கொண்டு பின் வரும் உத்தரவை வெயியிடுகிறோம்

0 comments:

Post a Comment