பிடிக்காதவர்களைக் கொல்ல புற்று நோய்க்கிருமி : வெனிசுலா அதிபர் அதிர்ச்சி தகவல்!இது தொடர்பாக சாவேஸ் கூறியிருப்பதாவது : இந்த விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மீது மட்டுமல்ல எவர் மீதும் குற்றச்சாட்டு கூற நான் விரும்பவில்லை. ஒருவேளை அவர்கள் நவீன வைரஸ்களின் மூலம் இவ்வாறு நோயைப் பரப்பியிருந்தால், அது மிகக் கொடூரமான செயல். ஆனால் உண்மையில் என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது. இலத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள இடதுசாரித் தலைவர்களுக்கு தொடர்ந்து இதுபோன்று நிகழ்ந்து வருவதை இயல்பானது என்று கூறி முற்றிலுமாக ஒதுக்கிவிடவும் முடியாது. இந்த விஷயத்தில் எனக்குத் தோன்றிய கருத்தை நான் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளேன்.
இதற்கு முன்பாக சிறைக் கைதிகளை வைத்து பாலியல் ரீதியான நோய்களைப் பரப்புவது குறித்து ஆய்வு செய்தது அமெரிக்காதான் என்றார். ஈக்வடார், பொலிவியா நாட்டு அதிபர்கள் மீது இனி கூடுதல் கவனம் செலுத்த இருக்கிறேன். ஒரு வேளை அவர்களுக்கும் புற்றுநோய் இருப்பது தெரிய வரலாம் என்று குறிப்பிட்ட அதிபர் சாவேஸ் எனக்கு புற்றுநோய் ஏற்பட்டபோது கியூபா சென்று அறுவை சிகிச்சை செய்துகொண்டேன் என்றார்.
அமெரிக்காவின் தீவிர எதிர்ப்பாளரான சாவேஸூம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அவர் தவிர பராகுவே அதிபர் பெர்ணான்டோ லுகோ, பிரேசில் அதிபர் டில்மா ரெüசெஃப், அவருக்கு அடுத்த நிலையில் உள்ள லூயிஸ் ஆகியோரும் இந்த ஆண்டில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் ஆர்ஜெண்டீனா அதிபர் கிறிஸ்டினா பெர்ணான்டஸூக்கு தைராய்டு புற்றுநோய் ஏற்பட்டுள்ள தகவல் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment